ஈரோடு மினி பஸ் ஸ்டாண்டில்.. இளம் ஜோடிகள் போதையில் ஜாலியாக இருந்த சம்பவம் நேரில் பார்த்த பொதுமக்களை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
ஈரோடு மினி ஸ்டாண்டில்.. சில ஜோடிகள் சுற்றி கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. ஊருக்கு செல்வது போலவும், வழியனுப்ப வருவது போலவும் உள்ளே வருகிறார்களாம்.
பிறகு, நீண்ட நேரத்துக்கு பஸ் ஸ்டேண்டிலேயே இருந்து வாலிப விளையாட்டில் ஈடுபட்டு விடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பஸ் ஸ்டேண்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த காட்சியை கண்டு அந்த பகுதி மக்களே கடுப்பாகி விட்டனராம்.
இரவு 11 மணி அளவில் இளைஞனும், ஒரு இளம்பெண்ணும் வந்துள்ளனர். இருவருமே அளவுக்கு அதிகமான போதையில் இருந்திருக்கிறார்கள். பிறகு திடீரென அந்த பஸ் ஸ்டேண்டிலேயே படுத்துக் கொண்டுள்ளனர். இதையடுத்து எல்லை மீறவும் ஆரம்பித்துள்ளனர்.
வேறு நபர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து கவனிக்கும் சுயநினைவை போதையால் இழந்த அவர்கள் கட்டிப்பிடித்தும், முத்தம் தந்தும். வரம்புகள் மீறப்பட்டு இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருவருமே ஜாலியாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதை வெளியூர் போய்விட்டு பஸ்ஸில் வந்து இறங்கிய சில பயணிகள் இதனைக் கண்டு, முகம் சுழித்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.