உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் மீரட் மருத்துவ கல்லூரியில் கொரோனா பரிசோதனைகாக வரும் நோயாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த இரத்த மாதிரிகளை ரத்தப் பரிசோதனைக் கூடத்தில் இருந்து குரங்கு கூட்டம் ஒன்று நுழைந்துள்ளது. அந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் அதிகாரி ஒருவரை நேரடியாக தாக்கி அவர் கையில் வைத்திருந்த ரத்த மாதிரிகளையும், பரிசோதனை கருவிகளையும் அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளன.
ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்ற குரங்குகள் அங்கிருந்த மரம் ஒன்றில் அமர்ந்து கடித்து துப்பியது. இந்த சம்பவத்தால் அங்குள்ள மனிதர்கள் பெரும் பீதி அடைந்துள்ளன. மேலும் இதனால் கொரோனா வைரஸ் பரவுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.