சுஷாந்த் கடந்த ஒருவருட காலமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கும் கிடைக்கும் பட வாய்ப்புகளை பெரிய நடிகர்கள் சேர்ந்து சதி செய்து அவரை நடிக்கவிடாமல் வாய்ப்புகளை பறித்துக் கொண்டனர். இதனால் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 7 பட வாய்ப்புகளை இழந்த சுஷாந்த் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சுஷாந்த் இறந்ததில் இருந்து மிகுந்த சோகத்தில் இருந்து வந்த அவரது முன்னாள் காதலி அங்கிதா தற்போது மகிழ்ச்சியான பதிவு ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘புதிய வாழ்க்கை துவங்கியதன் காரணமாக எங்கள் குடும்பம் சந்தோஷத்தில் இருக்கிறது. இரட்டைக் குழந்தைகளான அபீர் மற்றும் அபீராவை வரவேற்கிறேன்” என்று கேப்ஷன் கொடுத்து இரட்டை குழந்தைகளை கையில் ஏந்தியிருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதன் மூலம் தனது குடும்பத்தில் சுற்று பெரிதாகியிருப்பதாகவும், தான் அத்தை ஆகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.