December 5, 2025, 2:52 PM
26.9 C
Chennai

IPL 2024: மும்பை Vs லக்னோ

ipl 2024 - 2025
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

41ம் நாள் ஐபிஎல் 2024 – 30.04.2024 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

மும்பை அணியை (143/7, நெஹால் வதேரா 46, டிம் டேவிட் 35*, இஷான் கிஷன் 32, மொஹிஷின் கான் 2/36, மார்கஸ் ஸ்டோயினிஸ் 1/19) லக்னோ அணி (19.2 ஓவர்களில் 145/6, மார்கஸ் ஸ்டோயினிஸ் 62, கே.எல். ராகுல் 28, தீபக் ஹூடா 18, நிக்கோலஸ் பூரன் 14*, ஹார்திக பாண்ட்யா 2/26) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று லக்னோவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

இதனால் மும்பை அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான ரோஹித் ஷர்மா (5 பந்துகளில் 4 ரன்) மற்றும் சூர்ய குமார் யாதவ் (6 பந்துகளில் 10 ரன்) இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பின்னர் ஆடவந்த திலக் வர்மா (11 பந்துகளில் 7 ரன்), ஹாதிக் பாண்ட்யா (பூஜ்யம் ரன்), ஆகியோர் இன்று சிறப்பாக விளையாடவில்லை.

மும்பை அணி பவர் பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 28 ரன் மட்டுமே எடுத்திருந்தது. இதற்குப் பின்னர் நெஹல் வதேரா (41 பந்துகளில் 46 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) இரண்டாவது தொடக்க வீரரான இஷான் கிஷனுடன் (36 பந்துகளில் 32 ரன், 3 ஃபோர்) இணைந்து விளையாடி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார்.

இஷான் கிஷன் ஆட்டமிழந்த பின்னர் டிம் டேவிட் (18 பந்துகளில் 35 ரன்) உடன் இணைந்து விளையாடி அணி ஒரு மதிப்பான ஸ்கோரை அடைய உதவினார்.  இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கட் இழப்பிற்கு 144 ரன் எடுத்திருந்தது. 

145 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த லக்னோ அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான அர்ஷின் குல்கர்னி முதலாவது ஓவரின் நாலாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான கே.எல் ராகுல் (22 பந்துகளில் 28 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) மூன்றாவதாகக் களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோயினிஸ் (45 பந்துகளில் 62 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.

அதன் பின்னர் ஆடவந்த தீபக் ஹூடா (18 ரன்) மற்றும் நிக்கோலஸ் பூரன்  (ஆட்டமிழக்காமல் 14 ரன்) இருவரும் கொல்கொத்தா அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். அந்த அணி 19.2 ஓவரிலேயே 6 விக்கட் இழப்பிற்கு 145 ரன் எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் செய்தபோது மும்பை அணி மிக மோசமாக பேட்டிங் செய்தது. பின்னர் பந்து வீசியபோது ஹார்திக் பாண்ட்யா பந்துவீச்சாளர்களைக் கையாண்டவிதம் சரியில்லை.

பும்ரா போன்ற பந்து வீச்சாளரின் ஓவர்களை முன்னரே முடித்தது தவறான முடிவு. கடைசி இரண்டு ஓவர்களில் ஒன்றை பும்ரா வீசியிருக்க வேண்டும்.

17ஆவது ஓவரை தனது கடைசி ஓவராக பும்ரா வீசினார்; அந்த ஓவரில் அவர் ஒரு ரன் மட்டுமே கொடுத்தார். இனி மும்பை அணி பிளே ஆஃப் ஸ்டேஜுக்கு முன்னேறுவது சற்று கடினம். 

லக்னோ அணியின் மார்கஸ் ஸ்டோயினிஸ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காவும் பந்துவீச்சிற்காகவும்  ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை சென்னையில்  சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

30.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 981160.694
கொல்கொத்தா963121.096
லக்னோ1064120.094
சென்னை954100.810
ஹைதராபாத்954100.075
டெல்லி115610-0.442
குஜராத்10468-1.113
பஞ்சாப்9366-0.187
மும்பை10376-0.272
பெங்களூரு10376-0.415

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories