தமிழகத்தில் இன்று 5981 பேருக்கு கொரோனா கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்தது.
தமிழகத்தில் இன்று 5,981 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,03,242ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,30,564ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 6,948ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,870 பேர் குணம் அடைந்து, டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,43,930 ஆக அதிகரித்துள்ளது.
தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 43 லட்சத்தைத் தாண்டியது. இன்று ஒரே நாளில் 76,345 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 43,47,511 தனிநபர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரம்