அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் கைது!

avutukai

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் வனத்தையொட்டிய கல்லாறு என்ற இடத்தில், அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டால், வன விலங்குகள் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

அதாவது மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டு பன்றிக்கு அவுட்டுக்காய் வைக்கும் பழக்கம் உள்ளது. இதனால் ஏற்கெனவே, யானைகள், மாடுகள் அவுட்டுக்காயால் உயிரிழந்துள்ளன. இதற்கிடையில் மேலும் ஒரு பசுமாடு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவுட்டுக்காய்யை சாப்பிட முயன்றபோது, வாய் சிதறி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதனையடுத்து சட்டவிரோதமான முறையில், அவுட்டுக்காய் தயாரிக்கும் கும்பலை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், கல்லாறு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்த குணசேகரன், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதற்கிடையில் வனத்துறையினரின் வருகையை அறிந்த பிரகாஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார்.

இதனையடுத்து வனத்துறையினர் பிரகாஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவில் திருவிழாவிற்கு பயன்படுத்தப்படும், ஒலி மிகுந்த பட்டாசுகளை வாங்கி வந்து, அதில் கூர்மையான இரும்பு துகள்களை நிரப்பி, இந்த அவுட்டுக்காய்யை தயாரிப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் காட்டு பன்றி, மாடு உள்ளிட்ட விலங்குகள் உண்பதற்காக கோழி இறைச்சியை வெடிகுண்டியின் மீது பூசியும், மான் போன்ற விலங்குகள் உண்பதற்கு பலாச் சுளைகளை பூசியும் வைப்பதாக கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories