இங்கிலாந்தில் வாட்ஸ்அப் செய்தியை நம்பி 4 நாட்களாக தாயும் மகளும் சிறுநீரை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா விரட்டியடிக்க இதையெல்லாம் செய்தல் என்று பல போலி தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.
அதன்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறு நீர் குடித்தால் கொரோனா போய்விடும் என்று வாட்ஸ்அப் மூலமாக பரவிய வதந்தியை நம்பி இங்கிலாந்தை சேர்ந்த தாயும் மகளும் சிறுநீரை குறித்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
லண்டனை சேர்ந்த தாயும் மகளும் கொரோனா தடுப்பூசி ஆபத்தானது என்றும் பாரம்பரிய முறைப்படி சிறு நீரை குடித்தால் கொரோனா போய்விடும் என்ற வதந்தியை நம்பி 4 நாட்கள் தொடர்ந்து சிறுநீரை குடித்து வந்துள்ளனர்.