சீனாவில் 20 வருடங்களுக்கு பிறகு தனது மகளை திருமண நாளில் கண்டுபிடித்த தாய்.
சீனாவில் தன் மகனின் திருமணத்தில் கண்ட மணமகளை நீண்டகாலமாக இறந்து விட்ட தன் மகள் அந்த பெண் என்று அடையாளம் கண்டார் அதை அடுத்து ஆனந்த கண்ணீரில் மிதந்தார்.
மேலும் இந்த சம்பவம் மார்ச் 31 அன்று சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் அருகே நடந்தது.
மாமியார் தனது புது மருமகள் வருகையில் ஒரு பிறப்பு அடையாளத்தை கண்டுபிடித்தார். பின்னர் அது தான் இறந்த மகளின் கையில் இருந்தது போன்ற அந்த அடையாளங்கள் இருந்தன. பிறகு அடையாளத்தை கண்டறிந்த அவர் மணமகளின் பெற்றோரை அணுகி அவர் எங்கு இருந்தார் என்று கேட்டுள்ளார். உடனே அவர்கள் குழப்பமடைந்தனர். பிறகு பதிலளித்த அவர்கள் இந்தப் பெண்ணை நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்பே தத்து எடுத்து விட்டோம் என்று பதில் அளித்தனர்.
இந்தச் செய்தியைக் கேட்டதும் மணமகள் கண்ணீரில் இருந்து கண்ணீர் வடிந்தது பிறகு தன்னுடைய பெற்றோரை பற்றி அவர் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார். அதை விட உடன் இருந்த தனது தாயை மீண்டும் சந்தித்த தருணத்தை திருமண நாளை விட மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அந்தப்பெண் விவரித்துள்ளார்.
மேலும் அந்த மகள் தற்பொழுது தனது மூத்த சகோதரனை திருமணம் செய்ய விரும்பியுள்ளதால் முதலில் அதிர்ந்தனர்.
பின்னர் மகனும் தத்தெடுக்கப் பட்டதால் அவர்களின் திருமணத்திற்கு எந்த ஒரு ஆட்சேபணையும் இருக்காது என்று மாமியார் வெளிப்படுத்தினார்.
காணாமல் போன தனது மகளை குறித்து அனைத்து நம்பிக்கையும் விழுந்த பின் ஒரு ஆணை தத்தெடுத்து இருந்தார். அவர் பல ஆண்டுகளாக அவளை பல இடங்களில் தேடி வந்துள்ளார்.
மேலும் இருவரும் ரத்த உறவு இல்லாததால் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்று கூறி மணமகள் நிம்மதி அடைந்தார் இறுதியில் இருவீட்டாரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.