சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
காட்டு விலங்குகள் தொடர்பான பல்வேறு வகையான வீடியோக்களை நாம் இணையத்தில் பார்க்கிறோம். இவற்றில் சில சமயங்களில் விலங்குகளின் அன்பை நாம் பார்க்கிறோம்,
சில சமயங்களில் அவற்றுக்கு இடையில் இருக்கும் க்ரோதத்தைப் பார்க்கிறோம். சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகள் பிற விலங்குகளுடம் சண்டையிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இவை ஒரு பாம்புடன் சண்டையிடுவதைப் பார்ப்பது மிக அரிது.
இப்படிப்பட்ட ஒரு சண்டை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒரு ஆற்றங்கரையில் சிறு மலைப்பாம்பை சிறுத்தை ஒன்று தாக்குவதை வைரலாகி வரும் வீடியோவில் காண முடிகின்றது.
சிறிய மலைப்பாம்பு ஒன்றை பார்த்த உடனேயே சிறுத்தை அதன் மீது தாக்குதல் நடத்துவதை வீடியோவில் காண்கிறோம்.
காட்டு விலங்குகள் தொடர்பான இந்த காணொளியில், ஆற்றின் கரையில் சிறுத்தை ஒன்று தண்ணீர் குடிக்க வருவதைப் பார்க்கிறோம். அப்போது ஒரு சிறிய மலைப்பாம்பு ஒன்றை அது அங்கே காண்கிறது. சிறிதும் எதிர்பாராத விதமாக சிறுத்தை பாம்பின் மீது பாய்ந்து அதை வாயால் கவ்விக்கொள்கிறது.
இந்த தாக்குதலில், பாம்பும் சிறுத்தையை எதிர்த்து சண்டையிடுகிறது. எனினும், சிறுத்தை சுதாரித்துக்கொண்டு தன் பிடியை இன்னும் உறுதியாக்குகிறது. பின்னர் மலைப்பாம்பை வாயில் பிடித்தவாறு அங்கிருந்து செல்கிறது.
சிறுத்தைக்கும் பாம்புக்கும் இடையில் நடக்கும் சண்டையின் வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவில் காணப்படுவது போன்ற காட்சிகளை பொதுவாக பார்க்க முடியாது. Wild_animals_creation என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோவுக்கு இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.