நடிகை ராதிகா ஆப்தே, தேவ் டி என்ற பாலிவுட் படத்தின் ஆடிஷனுக்காக போன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகா ஆப்தே, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்துடன் நடித்த கபாலி மூலம், தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தவர். இவர் தெலுங்கு, இந்தி என மற்ற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நடிகைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வருகிறார். அண்மையில்கூட, தென்னிந்திய பெரிய நடிகர் ஒருவர் தன் பாதங்களை வருடியதால், அவருக்கு ஓர் அறை கொடுத்ததாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், பாலிவுட் நடிகை நேகா துபியா நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், அனுராக் கஷ்யப் இயக்கிய தேவ் டி என்ற படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனில் போன் செக்ஸ் வைத்துக் கொண்டேன் எனக் கூறியுள்ளார். அப்போது அவர் புனேவில் இருந்தாராம். ஆனால் அதற்கு பின் அவர் போன் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லையாம்!