நீங்க தேடிட்டு வர வேண்டாம்; நாங்களே வரோம்: நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்த இந்து அமைப்பினர்!

IMG 20180323 WA0096 e1521801574546 - 2026

திருநெல்வேலி: நீங்கள் தேடிக் கொண்டு வரவேண்டாம் நாங்களே வருகிறோம் எங்களைக் கைது செய்யுங்கள் என்று கூறி, நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தை இந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர்.

ராமராஜ்ய ரத யாத்திரையில் 144 தடை உத்தரவை மீறி ஒன்று சேர்ந்து ரதத்துக்கு வரவேற்பு அளித்த இந்து அமைப்பினரை, நேற்று நள்ளிரவு  வீடு வீடாகத் தேடிச் சென்று கைது செய்தனர் போலீஸார். இந்த நிலையில், எங்களை வீடு வீடாகத் தேடி வரவேண்டாம், நாங்களே வருகிறோம், எங்களைக் கைது செய்யுங்கள் என வலியுறுத்தி  நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இந்நிலையில், கைது செய்த அனைவரும் வேனை வீட்டு இறங்க மாட்டோம்; எங்களை சிறையில் அடையுங்கள் என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG 20180323 WA0097 e1521801680171 - 2026

இதனிடையே, நெல்லையில் ராம ரத யாத்திரையில்  கலவரம் செய்யும் நோக்கில் வந்த இரண்டு இஸ்லாமிய இயக்கத்தினர்களை  இந்து அமைப்பினர், காவல்துறையில் பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அவர்களை அப்படியே அனுப்பி வைத்துள்ளனர் காவல் துறையினர். இதை அடுத்து, அதனைக் கண்டித்தும் போராட்டம் நடத்தப் பட்டது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இதனிடையே, பா.ஜ.க பெண் பொறுப்பாளர் ஒருவரிடம் டவுண் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் அநாகரிகமாகப் பேசினார் என்று கூறி இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ரத யாத்திரையில் கலந்து கொண்ட இந்து அமைப்பினரை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்த நிலையில்,  27 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. இதனைக் கண்டித்து இந்து இயக்க பொறுப்பாளர்கள் சிறை செல்ல தயார் என கூறி சரண் அடைந்தனர்.

இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கா.குற்றாலநாதன்
பா.ஜ.க மாவட்டத் தலைவர் தயா சங்கர், பொதுச் செயலாளர் பாலாஜி கிருஷ்ணசாமி,  இந்து முன்னணி நிர்வாகிகள் பிரம்மநாயகம், வினோத், சுடலை சிவா, ராஜா செல்வம், பாஜக நிர்வாகிகள் ஆறுமுகம், கனேஷ் குமார், ஆதித்தன், பாபு, மாரியம்மாள், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ரவி உள்ளிட்ட 53 பேர் கைது செய்யப் பட்டதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் மண்டபத்தில் இறங்காமல்,  காவல்துறை வேனில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories