பொறியியல் கலந்தாய்வுக்கு மே 3 ஆம் தேதி முதல் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்ககலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ளிடம் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன், இந்தாண்டு முதல் முறையாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 29ம் தேதி விண்ணப்பம் கோருவதற்கான அறிவிப்பு வெளியிடும் நாள் என்றும், மே 3 முதல் மே 20ம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், விண்ணப்பதாரர்கள் அசல் சான்றினழ சரிபார்க்கும் பணிகள் ஜூன் முதல் வாரம் தொடங்கும் என்றும் வின்னபதாரர்குள் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விருப்ப வரிசையை சமர்பித்தல் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும் என்றார்.
2018- 19 கல்வியாண்டு முதல் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்லைனிலேயே நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.