நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவான உதவிப் பேராசிரியர் கைது

nirmala devi1 - 2026

மதுரை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் உதவிப் பேராசிரியர் முருகன் சிபிசிஐடி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப் பட்டு, அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்ட நிர்மலா தேவியிடம், நீதி மன்ற அனுமதியுடன் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் அவர் பல தகவல்களைக் கூறியுள்ளார். இதை அடுத்து, அவரது வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்ட போலீஸார், வீட்டில் இருந்து கணினி ஹார்ட் டிரைவ் உள்பட, நிர்மலா தேவி முறைகேடாக சேர்த்த சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், பத்திரங்களை எடுத்துச் சென்றனர். இதனிடையே தன்னுடன் தொடர்புடையவர்களாக பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகன் ஆகியோரை நிர்மலா தேவி குறிப்பிட்டிருந்தார்.

இவர்கள் இருவர் தூண்டுதலின் பேரில்தான் மாணவிகளிடம் தான் பேசியதாக நிர்மலாதேவி சிபிசிஐடி விசாரணையில் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், அவ்விருவரும் தலைமறைவாகினர். இதை அடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டிவந்தனர். இதை அடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்வதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதற்கு இடையே ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியைத் தேடி அவரது சொந்தஊரான திருச்சுழி அருகில் உள்ள நாடாகுளம் கிராமத்திற்குச் சென்ற சிபிசிஐடி போலீஸார், பலரிடம் அவர் குறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் திங்கள் கிழமை இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் கையெழுத்து போடுவதற்காக வந்த உதவிப் பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீஸாஅர் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories