நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவான உதவிப் பேராசிரியர் கைது

nirmala devi1 - 2026

மதுரை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் உதவிப் பேராசிரியர் முருகன் சிபிசிஐடி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப் பட்டு, அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்ட நிர்மலா தேவியிடம், நீதி மன்ற அனுமதியுடன் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் அவர் பல தகவல்களைக் கூறியுள்ளார். இதை அடுத்து, அவரது வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்ட போலீஸார், வீட்டில் இருந்து கணினி ஹார்ட் டிரைவ் உள்பட, நிர்மலா தேவி முறைகேடாக சேர்த்த சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், பத்திரங்களை எடுத்துச் சென்றனர். இதனிடையே தன்னுடன் தொடர்புடையவர்களாக பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகன் ஆகியோரை நிர்மலா தேவி குறிப்பிட்டிருந்தார்.

இவர்கள் இருவர் தூண்டுதலின் பேரில்தான் மாணவிகளிடம் தான் பேசியதாக நிர்மலாதேவி சிபிசிஐடி விசாரணையில் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், அவ்விருவரும் தலைமறைவாகினர். இதை அடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டிவந்தனர். இதை அடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்வதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதற்கு இடையே ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியைத் தேடி அவரது சொந்தஊரான திருச்சுழி அருகில் உள்ள நாடாகுளம் கிராமத்திற்குச் சென்ற சிபிசிஐடி போலீஸார், பலரிடம் அவர் குறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் திங்கள் கிழமை இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் கையெழுத்து போடுவதற்காக வந்த உதவிப் பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீஸாஅர் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories