மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 4வது பனுவலை காண இருக்கிறோம்.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் என்று தொடங்கும் இந்தப்பாடலில் மாணிக்கவாசகர் இறைவனை அடியவர்கள் எவ்விதமெல்லாம் வணங்குகின்றனர் என்பதை நமக்கு எடுத்துக்கூறி அதன்மூலம் நாமும் எப்படி அவனை வணங்கவேண்டும் என்பதையும் காட்டுகிறார்.
நாமும் இறைவனை மனமுருக பாடி தொழுது அவன் பாதம் சரணடைவோம்!