தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று மாலை தஞ்சை சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இறகுப் பந்துப் போட்டியை தொடங்கி வைத்தார்.
பின்னர் கும்பகோணம் சென்ற விஜயபிரபாகரன் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
நான் எங்க அப்பா முகத்துல காலைல எழுந்து முழிக்கிறேனோ இல்லையோ… எல்லா கட்சிக்காரங்களும் வரிசை கட்டி வந்து எங்கப்பா முன்னாடி நிக்கிறாங்க…
தேமுதிக., ஓஞ்சி போச்சு அப்டின்றாங்க.. ரெண்டு பெர்சண்டு மூனு பெர்சண்டு அப்டின்றாங்க.. இங்க இருக்கற கூட்டத்த பாருங்க. இங்க இருக்கற கூட்டத்த காமிங்க.. ஏதோ விவாத மேடையின்னு உட்கார்ந்து எல்லா டிவிக்கள்லயும் யாரோ நாலு பேரு உக்காந்து பேசறாங்க…
தேமுதிக.,வுக்கு 3 சீட் 4 சீட் போதும்னு பேசிக்கிறாங்க…! நீங்க யாருங்க அதை சொல்லுறதுக்கு! எங்களுக்கு 4 சீட்டு கொடுக்கணும்னு நீங்க யாரு பிக்ஸ் பண்றது!
எங்க வலிமை என்னான்னு எங்களுக்கு தெரியும். அதவிட மத்த கட்சிக்காரங்களுக்கு தெரியுது. அதனால்தான் வந்து நிக்கிறாங்க!
தேமுதிக.,வுக்கு இன்னும் உயிர் இருக்கு. அது எங்க இருக்குன்னா.. தொண்டர்களாகிய உங்ககிட்டதான்.. ! எதுவுமே ஏறி இறங்கும். ஒரே லைன்ல போச்சுன்னா… இறந்துட்டான்னு அர்த்தம்!
அவரு கண் இமைச்சாலே போது\ம்.. சிங்கம் குகைக்குள்ள இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான்… கூட்டமா பன்னிங்க சுத்தினாலும் பன்னி பன்னிதான். எங்களை லேசில எடை போடாதீங்க.. இங்கே எத்தனை இளைஞர்கள் பாருங்க! இது இளைஞர்கள் நிறைந்த கட்சி!
தற்போது டெல்லிக்கு குரல் கொடுப்பதற்கு சரியான தலைவர் இல்லை. தமிழ்நாட்டுக்கு திட்டங்களை செய் என்று சொல்லும் தலைவரை கொண்டுவர வேண்டும். இப்போது உள்ளவர்கள் போல் வாயை மூடிகொண்டு சுற்றுகிற ஆள் விஜயகாந்த் இல்லை. இப்போதுள்ள கட்சியினரிடையே தப்பு பண்ணாத தலைவராக விஜயகாந்த் உள்ளார். அவர் மீது எந்தக் குற்றமும் சொல்ல முடியாது.
தேமுதிக., ஓஞ்சி போச்சுன்னு சொல்றவங்க மூஞ்சியெல்லாம் கிழிஞ்சி தொங்கணும்… செய்வீங்களா? செய்வீங்களா?
ஓங்கி கொடுக்கற கட்சி.. ஓஞ்சி போற கட்சி இல்ல.. வரும் தேர்தல்ல கேப்டன் ஆதரவில்தான் ஆட்சி அமையும்! என்று உறுதியிட்டு கூறினார் அவரது மகன்.