அதிமுக., கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனபதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்து வரும் ஆதரவுக்காக, திருநெல்வேலி பேராயம் செபம் செய்து, ஆசி கூறியது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பல தரப்பினரும் தங்கள் ஆதரவை கூட்டணிகளுக்கும் கட்சிகளுக்கும் கொடுத்து வருகின்றனர்.
மத்திய மோடி அரசுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் பலர் ஜபம் செய்வதாக அவ்வப்போது, வாட்ஸ் அப்களில் செபம் செய்து வீடியோக்கள் உலா வரும். இப்படி மத ரீதியாக நாட்டைப் பிளவு படுத்தும் கிறிஸ்துவ இஸ்லாமிய சக்திகளுக்கு இடையே, திருநெல்வேலி பேராயம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மதத்தை மீறி நல்ல செயல்களுக்காக எடப்பாடி மற்றும் கூட்டணியை ஆதரிப்பதாகக் கூறியது.