பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்
நைஜீரியாவின் லோகோஸ் நகரில் தொடக்கப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று மாடிகளை கொண்ட தொடக்க பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் அப்பள்ளியில் படிக்கும் 10 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
மேலும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளை இடிபாடுகளில் இருந்து மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.