புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
பச்சையும்,மஞ்சளும் கலந்த நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.
இது குறித்த அதன் அறிக்கையில் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் பின்புறத்தில் எல்லோரா குகைகளின் உருவத்துடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரூபாய் தாள் மஞ்சள் பச்சை நிறங்களில் உருவாக்கப் படுகிறது.
புதிய ரூபாய் நோட்டு வந்தாலும் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.