spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியா44வது ஒலிம்பியாட்: சென்னை செஸ் 4வது நாளில்..!

44வது ஒலிம்பியாட்: சென்னை செஸ் 4வது நாளில்..!

- Advertisement -

44வது சென்னை செஸ் ஒலிம்பியாட் – நான்காம் நாள் – 01.08.2022

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இன்று இந்திய அணிகள் வெற்றி, தோல்வி, ட்ரா என கலந்து பெற்றன. மூன்றாவது சுற்றில் இத்தாலி அணி நார்வே அணியை 3-1 புள்ளிக் கணக்கில் வென்றது ஒலிம்பியாடின் மறக்கமுடியாத தருணம். இந்தியா B அணி தற்போது வரை முன்னணியில் உள்ளது.

இன்று எஸ்தோனியாவைச் சேர்ந்த வீரர் மீலிஸ் கனெப் என்பவர் ஆட்டத்தின்போது மயக்கமடைந்தார். அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெண்கள் பிரிவில் மங்கோலியா அமெரிக்காவை நேற்று வீழ்த்தியது. இந்திய A அணியும் பிரான்ஸ் அணியும் இன்று நான்காவது சுற்றில் சந்தித்தன.

ஹரிகிருஷ்ணா, விதித் குஜராதி, எரிகைசி அர்ஜுன், எஸ்.ஏல் நாராயணன் நால்வரும் தங்களது ஆட்டங்களை ட்ரா செய்து தலா அரைப்புள்ளி பெற்றனர். எனவே இரண்டு அணியும் 2-2 என்ற புள்ளிகள் பெற்று, ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிந்தது.

இந்திய B அணியும் இத்தாலி அணியும் மோதின. குஹேஷ், சரின் நிஹில் இருவரும் தங்களது ஆட்டங்களை வென்று தலா ஒரு புள்ளி பெற்றனர். பிரக்ஞானந்தாவும் சாத்வானி ரௌனக்கும் தலா அரைப்புள்ளி பெற்றனர். எனவே இந்திய B அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

இந்தியா C அணியும் ஸ்பெயின் அணியும் சந்தித்தன. கங்குலி, சேதுராமன், கார்த்திகேயன் முரளி மூவரும் ஆட்டத்தை ட்ரா செய்து தலா அரைப்புள்ளி பெற்றனர். ஆனால் அபிஜித் குப்தா தோல்வியடைந்தார். இதனால் இந்திய C அணி ஸ்பெயினிடம் 1.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது.

பெண்கள் பிரிவில் இந்தியா A அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா த்ரோணவள்ளி, வைஷாலி ஆகியோர் தங்களது ஆட்டங்களை ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். நாலாவது ஆட்டக்காரரான தனியா சச்சதேவ் ஹங்கேரிய வீராங்கனையை வென்று ஒரு புள்ளி பெற்றார்.

இதனால் இந்தியா A பெண்கள் அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் ஹங்கேரியை வென்றது. இந்தியா B பெண்கள் அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்டோனியாவை வென்றது. வந்திகா அகர்வால் ஒரு புள்ளியும் பத்மினி, சௌம்யா, டிவ்யா மூவரும் தலா அரைப்புள்ளியும் பெற்றனர். இந்தியா C அணி ஜியார்ஜியா அணியுடன் மோதி தோவியைத் தழுவியது.

கர்வாடே ஈஷா, வர்ஷிணீ, ப்ரத்யுஷா ஆகியோர் தொற்றுப் போயினர். பி.வி. நந்திதா மட்டும் வென்று ஒரு புள்ளி பெற்றார். ஆண்கள் பிரிவில் இந்தியா B அணி முதலிடத்திலும் பெண்கள் பிரிவில் A, B, C அணிகள் முறையே நாலாவது, ஆறாவது மற்றும் இருபத்தியெட்டாவது இடத்திலும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,141FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,903FollowersFollow
17,200SubscribersSubscribe