February 11, 2025, 8:16 AM
23.3 C
Chennai

ஆலயம் காப்போம்; ஸ்ரீரங்கம் ஆலய மரபுகளைக் காக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

இன்று ( 05.11.2022 ) மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆலயம் காப்போம் அமைப்பின் சார்பில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதஸ்வாமி திருக்கோவிலில் மரபுகளைகாத்திட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் கட்சியின் அமெரிக்கை நாராயணன், ஒரேநாடு இதழ் ஆசிரியர் இராம நம்பி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு உரை ஆற்றினர்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு திருவாராதன பூஜைகள், புறப்பாடுகள் ஆகம, மரபு வழி நீண்ட கால பழக்கபடி பகவத் ஸ்ரீராமாநுஜர் வகுத்த நெறிமுறைகள் மாறாமல் குறித்த நேரத்தில் நடைபெற்றிட வேண்டும்.

ஸ்ரீரங்கநாதசுவாமிக்கு திருக்கோவில் நிர்வாக திட்ட வழிகாட்டுதல் படி தளிகை, பிரசாதங்கள், அமுதுபடிகள் அளவு, தரம் குறையாது அதற்குரிய பூஜை காலங்களில் முறையாக நடத்திட வேண்டும்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி,ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீஜம்புகேஸ்வரசுவாமி திருக்கோவில்களை உள்ளடக்கிய மிகப் பழமையான இத் தீவினை பாரம்பரிய, மரபு மாறாமல் காத்திட புனித தீவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோவில் நிர்வாக சட்டம் 1942ன் படியும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படியும் பரம்பரை அறங்காவலர்கள் மட்டுமே சுழல் முறையில் அறங்காவல் குழு தலைவராக (Chairman board of Trustees) பொறுப்பு வகிக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும். சுழல் முறையாக பரம்பரை அறங்காவலர்கள் பொறுப்பேற்பது கடந்த நான்கைந்து ஆண்டுகளாக தடை செய்யபட்டு இருக்கிறது.

இந்து சமய அறநிலையத் துறையால் நியமனம் பெறும் பரம்பரை அல்லாத அறங்காவலர்களாக திருக்கோவில் மரபுகளை அறிந்த, பல சமூகங்களை உள்ளடக்கிய உள்ளுர் நபர்களை பொறுப்பேற்க தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

நம்பெருமாள் கட்டளையால் ஸ்ரீபராசர, ஸ்ரீவேதவ்யாஸ பட்டர்கள் அரையர்களுக்கு நடத்தப்படும் பிரம்மரத மரியாதையை (தோளில் சுமப்பது-பட்டணபிரவேசம்) எவ்வித இடையூறும் இன்றி நடத்திட வழிவகை செய்ய வேண்டும்.

திருக்கோவிலின் எவ்வித பணியாளராகவும் இல்லாமல் தேவஸ்தான அதிகாரிகளுக்கு வசூல் ஈட்டி தந்து வாலண்டரி சர்வீஸ் என்ற பெயரில் இயங்கும் அடியாட்களை உடனடியாக வெளியேற்றுவது, பணி ஓய்வு பெற்றாலும் தனியார் கம்பெனிகளின் சம்பளத்தில் ஏஜன்டுகளாக, ஒட்டுண்ணிகளாக இருந்து கொண்டு தங்களின் சுயவிருப்பு வெறுப்பு படி அடுத்தடுத்து வரும் அதிகாரிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு கோவில் பூஜை, மரபுகளை சரி வர செய்ய விடாமல் தடுக்கும் நபர்களையும் வெளியேற்ற வேண்டும்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி திருக்கோவில் செயல் அலுவலராக எட்டு ஆண்டுகளாக பணியாற்றிய போது திருக்கோவிலின் ஆகம பூஜைகள், திருவிழாக்கள். புறப்பாடுகள் நீண்ட கால பழக்க வழக்கங்கள் வைணவ மரபுகளை சீர்குலைத்தும், இறைபணிசெய்பவர்களுக்குள் பிரிவினை சூழ்ச்சியை அமல்படுத்தியும் தனது சட்டவிரோத குற்ற நடவடிக்கைகளை மறைக்க தற்போது சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக (திருப்பணி) பணியாற்றினாலும் திரைமறைவில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பொன்.ஜெயராமனை பணி நீக்கம் செய்து ஸ்ரீரங்கம் கோவில் மரபுகளை காத்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

Topics

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

Entertainment News

Popular Categories