புண்ணிய பூமியில் இன்று… – 02.09.2019: இன்றைக்கு விநாயகர் சதுர்த்தி. விக்னங்களை தீர்த்து வைப்பவன் விநாயகன். விநாயகர் வழிபாடு தொன்று தொட்டு நம் முன்னோர்களால் காலம் காலமாக வழிபட்டு வரும் தமிழர் பண்டிகை. ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி விழாவும் ஆன்மிக விழாவாக மட்டுமல்லாமல் சமுதாய பெருவிழாவாகவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
1970ல் இதே தினத்தில் தான் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் பல போராட்டங்களுக்குப் பிறகு எழுப்பப்பட்டது.
இந்த இரு நிகழ்வுகள் குறித்து திரு. அரங்கநாதன் கூறக் கேட்போம்.