”குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். ஆபாச படம், வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப்களில் வைத்திருப்பதும், அது சம்பந்தப்பட்ட லிங்க்குகளை பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம். இப்படி செய்பவர்களுக்கு 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்” என்று காவல்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இவ்வளவு கடுமையாக எச்சரித்தும்கூட, திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் சில தினங்களுக்கு முன்பு சிக்கினார். ஏசி மெக்கானிக்கான இவர், எப்ப பார்த்தாலும் குழந்தைகள் ஆபாச வீடியோவை டவுன்லோடு செய்வது, அதையே வெறித்தனமாக பார்த்து கொண்டிருப்பது, நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் ஷேர் செய்வது என்றே பல வருடமாக பொழுதை கழித்திருக்கிறார்.. இவரது ஐடி-யை வைத்து காவல்துறையினர் கைது செய்திருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், திரும்பவும் ஒருவர் சிக்கி உள்ளார்.. அதிலும் 72 வயசு தாத்தா இந்த காரியத்தை செய்துள்ளார்.. இவர் பெயர் மோகன்.. சென்னை சூளைமேட்டில் வசித்து வருகிறார்.. இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார்.. குழந்தைகள் ஆபாச வீடியோவை மோகன் டவுன்லோடு செய்து இந்த ஆபாச வீடியோ பார்த்து வந்திருக்கிறார்.
இத்துடன் மோகன் நிற்கவில்லை.. இவர் வீட்டுக்கு வந்த வந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு ஐ-பேடில் குழந்தை ஆபாச வீடியோக்களை காட்டி உள்ளார்.. அந்த வீடியோக்களை பார்க்குமாறும் கட்டாயப்படுத்தி உள்ளார்.
இதனால் எரிச்சலும் ஆத்திரமும் அடைந்த அந்த மாணவி, போலீசில் புகார் தரவும்தான் மோகன் கைதாகி உள்ளார். கைது செய்யப்பட்ட மோகன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.