அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக திட்டமிட, கூடுதல் செயலர் ஜெய்னேஷ் குமார் தலைமையிலான 3 அதிகாரிகள் கொண்ட புதிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை இக்குழு நிறைவேற்றும்.
அயோத்தி வழக்கு தொடர்பான உத்தரவுகளை மூன்று அதிகாரிகளும் கையாளுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தீர்ப்பில் குறிப்பிட்டபடி 5 ஏக்கர் நிலத்தை உத்தரப்பிரதேச வக்பு வாரியத்திடம் ஒப்படைப்பது தொடர்பாகவும் இந்த குழு நடவடிக்கை எடுக்கும்.