உலக நாயகன் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி முதல் தேர்தலையும் சந்தித்து விட்டார். அந்த தேர்தலில் அவரது கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் சென்னை உள்பட ஒருசில முக்கிய தொகுதிகளில் சில வாக்குகளை பெற்றார். தற்போது கட்சியை பலப்படுத்த கடந்த இரண்டு ஆண்டுகளில் பல முயற்சிகளை செய்து வருகிறார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அவர் நிச்சயம் போட்டியிட்டு மக்களின் நன்மதிப்பை பெற கடுமையாக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் கமல் மீதி பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, ‘கமல்ஹாசன் நடிப்பில் திரையுலக சக்கரவர்த்தி தான்
ஆனால் அதே நேரத்தில் அரசியலில் இன்னும் அவர் LKG-யில் கூட சேரவில்லை என்று கூறியுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த கருத்துக்கு கமல்ஹாசன் ரசிகர்கள் வழக்கம் போல் ட்விட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.