தொழிலாளியை அடித்துக் கொன்ற திருநங்கைகள்!

Screenshot_2020_0818_145926

ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ராம நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் இருந்த ராஜேந்திராவை திருநங்கைகள் 3 பேர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன்பின்னர் மருத்துவர்கள் இதுகுறித்து திருநங்கைகளிடம் கேட்டபோது, அவர்கள் 3 பேரும் சந்தேகம் அளிக்கும் வகையில் பதில் அளித்ததால், மருத்துவர்கள் உடனடியாக ராமநகர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின்பேரில் மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் 3 திருநங்கைகளிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்த ராஜேந்திரா, மாலையில் வேலை முடிந்தவுடன் திருநங்கை போல வேடமிட்டு பெங்களூரு நைஸ் ரோட்டில் நின்று வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் வசூல் செய்துள்ளார். அதனால் திருநங்கைகள் ஆன தேவி, பாவனா, நித்யா ஆகிய மூவருக்கும் வருமானம் குறைந்துள்ளது. அதுமட்டுமன்றி இராஜேந்திரா, திருநங்கை போல வேடமிட்டு வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்று வந்ததை மூவரும் அறிந்துள்ளனர்.

Screenshot_2020_0818_145856

இந்நிலையில் நைஸ் ரோட்டில் நின்று கொண்டிருந்த ராஜேந்திராவிடம், திருநங்கைகள் 3 பேரும் இதுகுறித்து கேட்டபோது, அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அச்சமயத்தில் ஆத்திரமடைந்த திருநங்கைகள் 3 பேரும் ஒன்றாக இணைந்து ராஜேந்திராவை பலமாக தாக்கியுள்ளனர். அதனால் மயக்கமடைந்த அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். அதனால் மூன்று திருநங்கைகளும் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.

சம்பவம் பற்றி ராமநகர் காவல்துறையினர், எலக்ட்ரானிக் சிட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பின்னர் ராம நகருக்குச் சென்ற எலக்ட்ரானிக் சிட்டி காவல்துறையினரிடம் 3 திருநங்கைகளையும் ஒப்படைத்தனர். அதன் பின்னர் மூன்று திருநங்கைகள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories