அதே அறையில் அவரது கணவர் தீரஜ் மற்றும் 2 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர். உடலை மீட்டு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிய போலீஸ் அந்த வீட்டை சோதனை செய்துள்ளனர்.
அப்போது தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உணவில் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து, அவர்கள் மயங்கியதும் விஷ ஊசி போட்டு சுஷ்மா கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியே இல்லை என்றும் வாழ்வதே வீண் என்றும் சுஷ்மா கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் பெண் மருத்துவர் ஒருவர் தனது குழந்தைகளுக்கும், கணவருக்கும் விஷ ஊசி போட்டு கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்துள்ளார். இவர்களின் உடலை கைப்பற்றிய போலீஸ் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வசித்து வரும் பெண் மருத்துவரான சுஷ்மா ரானே(வயது 40) வீட்டில் வேலை செய்யும் பெண் அவர்கள் பல மணி நேரமாக வீட்டின் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சுஷ்மா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய படி பிணமாக இருந்துள்ளார்.
அதே அறையில் அவரது கணவர் தீரஜ் மற்றும் 2 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர். உடலை மீட்டு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிய போலீஸ் அந்த வீட்டை சோதனை செய்துள்ளனர்.
அப்போது தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உணவில் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து, அவர்கள் மயங்கியதும் விஷ ஊசி போட்டு சுஷ்மா கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியே இல்லை என்றும் வாழ்வதே வீண் என்றும் சுஷ்மா கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.