வயிறு கீறப்பட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரேசிலை சேர்ந்த Flavia என்னும் கர்ப்பிணி பெண்ணை அவரது பள்ளித்தோழி வளைகாப்பு நடத்துவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
ஆனால் வெகு நேரமாகியும் Flavia வீடு திரும்பாத நிலையில் Flavia-வை தேடி அவரது கணவரும் தாயும் சென்றுள்ளனர்.
அப்போது ஒரு இடத்தில் Flavia வயிறு கீறப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதோடு அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் காணாமல் போயிருந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில் அவரது தோழி தான் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், “எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் தோழியின் குழந்தையை திருடி செல்ல திட்டமிட்டோம்.
அதற்காகவே வளைகாப்பு நடத்துவதாக அழைத்துச் சென்று தலையில் கல்லால் அடித்தோம். பின்னர் வயிற்றை கீறி குழந்தையை எடுத்தோம்” என குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் கர்ப்பிணி பெண்ணின் தோழியை கைது செய்ததோடு இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.