தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று முதல் மின்சார ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டு 279 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை-திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கத்தில் 48 ரயில்களும், திருவள்ளூர், அரக்கோணம்-சென்னை மார்க்கத்தில் 49 ரயில்களும் இயக்கப்படுகின்றன.
சென்னை-கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 24 ரயில்களும், கும்மிடிப்பூண்டி, சூலூர் பேட்டை-சென்னை 24 ரயில்களும், சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே 12 ரயில்களும், வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே 17 ரயில்களும் இயக்கப்படுகின்றன.
சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 44 ரெயில்களும், தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர்- சென்னை கடற்கரை மார்க்கத்தில் 44 ரயில்களும் இயக்கப்படுகின்றன.
ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ இடையே 2 ரயில்களும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ-ஆவடி, பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ இடையே 4 ரயில்களும் இயக்கப்படுகின்றன.
ஞாயிறு கால அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.