பெற்றோர்களே கவனம்: 2 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

coin
coin

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 வயது சிறுவனின் உணவுக் குழாயில் சிக்கிய ஒரு ரூபாய் நாணயத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபி மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.

திருவண்ணாமலை அடுத்த மேல்கச்சிராப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் கூலித் தொழிலாளி லட்சுமணன். இவரது 2 வயது மகன் வெற்றிவேல். இந்த சிறுவன் நேற்று முன்தினம் காலை உணவு உட்கொள்ள முடியாலும் மற்றும் தண்ணீர் குடிக்க முடியாமலும் அவதிப்பட்டுள்ளார்.

coin2
coin2

இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர், திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக, சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை கூட கிடைக்க வில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில், சிறுவனின் உணவுக் குழாயில் நாணயம் வடிவில் ஒரு பொருள் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, காது, மூக்கு,தொண்டை பிரிவு தலைவர் மருத்துவர் இளஞ்செழியன் தலைமையில் சிறப்பு மருத்துவர் சிந்துமதி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றனர்.

coin1
coin1

மயக்கவியல் பிரிவு தலைவர் மாதவகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்தனர். இதையடுத்து, அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபி மூலமாக சிறுவனின் உணவுக் குழாயில் சிக்கி இருந்த பொருள் 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டது.

பின்னர் அந்த பொருளை பார்த்தபோது, உணவுக்குழாயில் அடைத்திருந்தது ஒரு ரூபாய் நாணயம் என தெரியவந்தது.

இது குறித்து சிறப்பு மருத்துவர் இளஞ்செழியன் கூறும்போது, ‘குழந்தை மற்றும் சிறுவர்களை பெற்றோர் கவனமாக கண்காணிக்க வேண்டும். அவர்களை விளையாட விட்டு விட்டு, தங்களது பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

மேலும், நாணயம் உள்ளிட்ட சின்னஞ்சிறிய பொருட்களை, குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு எட்டும் தொலைவில் வைக்கக்கூடாது. அதேபோல், விளையாடுவதற்காக நாணயங்களை வழங்கக்கூடாது. குழந்தைகளை பாதுகாப்பாகவும், கவனமாகவும் கண்காணிக்க வேண்டும்’ என்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories