December 5, 2025, 9:53 AM
26.3 C
Chennai

பெற்றோர்களே கவனம்: 2 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

coin
coin

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 வயது சிறுவனின் உணவுக் குழாயில் சிக்கிய ஒரு ரூபாய் நாணயத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபி மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.

திருவண்ணாமலை அடுத்த மேல்கச்சிராப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் கூலித் தொழிலாளி லட்சுமணன். இவரது 2 வயது மகன் வெற்றிவேல். இந்த சிறுவன் நேற்று முன்தினம் காலை உணவு உட்கொள்ள முடியாலும் மற்றும் தண்ணீர் குடிக்க முடியாமலும் அவதிப்பட்டுள்ளார்.

coin2
coin2

இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர், திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக, சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை கூட கிடைக்க வில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில், சிறுவனின் உணவுக் குழாயில் நாணயம் வடிவில் ஒரு பொருள் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, காது, மூக்கு,தொண்டை பிரிவு தலைவர் மருத்துவர் இளஞ்செழியன் தலைமையில் சிறப்பு மருத்துவர் சிந்துமதி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றனர்.

coin1
coin1

மயக்கவியல் பிரிவு தலைவர் மாதவகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்தனர். இதையடுத்து, அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபி மூலமாக சிறுவனின் உணவுக் குழாயில் சிக்கி இருந்த பொருள் 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டது.

பின்னர் அந்த பொருளை பார்த்தபோது, உணவுக்குழாயில் அடைத்திருந்தது ஒரு ரூபாய் நாணயம் என தெரியவந்தது.

இது குறித்து சிறப்பு மருத்துவர் இளஞ்செழியன் கூறும்போது, ‘குழந்தை மற்றும் சிறுவர்களை பெற்றோர் கவனமாக கண்காணிக்க வேண்டும். அவர்களை விளையாட விட்டு விட்டு, தங்களது பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

மேலும், நாணயம் உள்ளிட்ட சின்னஞ்சிறிய பொருட்களை, குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு எட்டும் தொலைவில் வைக்கக்கூடாது. அதேபோல், விளையாடுவதற்காக நாணயங்களை வழங்கக்கூடாது. குழந்தைகளை பாதுகாப்பாகவும், கவனமாகவும் கண்காணிக்க வேண்டும்’ என்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories