ராலேகான் ஸித்தி: தில்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்தற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம்; கிரண் பேடி அல்ல என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே சாடியுள்ளார். தில்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக அன்னா ஹசாரே கருத்து தெரிவித்த போது, நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. ஊழலை ஒழிப்போம் என்று நரேந்திர மோடி உறுதியளித்தார். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. நரேந்திர மோடி மீதான மக்கள் நம்பிக்கை அழிந்து போய்விட்டது பாரதிய ஜனதாவின் தோல்விக்கு கிரண்பேடி காரணம் அல்ல.. கிரண்பேடி பாரதிய ஜனதாவில் இணைந்தது தவறு. நான் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று அன்னா ஹசாரே கூறினார்.
To Read this news article in other Bharathiya Languages
பா.ஜ.க. தோல்விக்கு பேடி அல்ல; மோடியே காரணம்: அன்னா ஹசாரே
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari