கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு தற்போது நிலைமை கட்டுபடுத்தப்பட்டு விட்டதாக அரசு அறிவித்துள்ள நிலையில், சட்டசபை கூட்டத்திற்கு வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏ பர்கல் அப்துல்லா முகத்தில் முகமூடி மற்றும் கையுறையுடன் சட்டசபைக்கு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் இதுவரை 16 பேர் இறந்துள்ளனர். நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக வரும் 12 தேதி வரை கோழிக்கோட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.