அரசு அலுவலகங்களில் கட்சி பிரமுகர்கள் வந்து அரசியல் நடவடிக்கை மேற்கொள்வதை தடுக்க தமிழகம் முழுவதும் எம்எல்ஏக்கள், உள்ளாட்சி தலைவர்கள், கவுன்சிலர்களின் அறைகள் பூட்டி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததை அடுத்து, எம்எல்ஏக்களின் அரசு அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் அலுவலகங்களை காலி செய்து சீல் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, அங்குள்ள பொருட்களை அப்புறப்படுத்த இன்று ஒரு நாள் மட்டும் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது