spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்செங்கோல்: தமிழர் பெருமையின் புதிய உணர்வு!

செங்கோல்: தமிழர் பெருமையின் புதிய உணர்வு!

modi sengol turn
#image_title

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.வைத்யசுப்ரமணியம், ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரையை, மயிலாடுதுறை ஜி.எஸ்.பாலமுருகன் தமிழாக்கம் செய்திருக்கிறார்.

சுதந்திர இந்தியாவிற்கு அதிகாரத்தை மாற்றியதன் அடையாளமாக நேருவுக்கு புனித செங்கோல் வழங்கப்பட்டது. 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு, திருஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தில், ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே’ என்ற வரிகள், அதிகாரப் பரிமாற்றத்தின் அடையாளமாக செங்கோல் ஒப்படைக்கப்பட்டபோது முழங்கியது.

இந்தியாவின் சுதந்திரத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், அதிகாரத்தை மாற்றுவது தொடர்பான ஆலோசனைக்காக அறிஞர்-அரசியலாளரான சி.ராஜகோபாலச்சாரியார் (ராஜாஜி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்) பக்கம் திரும்பினார் நேரு. ராஜாஜி தனது கூர்மையான அறிவுத்திறனை பயன்படுத்தி, திருவாவடுதுறை ஆதீனத்தால் (தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சைவ மடம்) சிறப்பாக உருவாக்கப்பட்ட செங்கோலை நேருவிடம் ஒப்படைக்கும் யோசனையை முன்மொழிந்தார். இந்த வரலாற்று மைல்கல் பின்னணியில், ‘நாடாளுமன்றம் நோக்கி செங்கோல்’ என்ற செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்தார்.

நாட்டின் ஜனநாயகக் கோயிலின் மைய மண்டபத்தில் புனிதமான செங்கோல் நிறுவப்பட்டிருப்பது வரலாற்று நிகழ்வு. இது தமிழர் பெருமையின் புதிய உணர்வை நம் உடலில் ஏற்படுத்துகிறது. செங்கோல் நிறுவப்பட்டதன் விழா, ஆகஸ்ட் 14/15, 1947க்கு நம் மனதை பின்னோக்கி நகர்த்துகிறது. 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை கொண்டாடும் வேளையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் செங்கோல் உள்ளது அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் தருணமாகும். வரலாற்று உண்மைகளில் இந்த செங்கோல் நிகழ்வு தமிழர்கள் மட்டுமல்லாது, ஆட்சியின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரின் மனதையும் தொடுகிறது.

இந்தியாவின் நாகரிகச் சொத்தான செங்கோல், இப்போது நம் நாடு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் பேசுபொருளாக இருக்கிறது. இந்தியாவின் செங்கோல் ஜனநாயக ஆட்சியின் இரு கண்களான சட்டம் மற்றும் தர்மத்தை நாடாளுமன்றத்தில் நிலைநிறுத்தும். சங்க இலக்கியம், பண்பாடு, கலைகள் முதலியன அனைத்தும் சேர, சோழ, பாண்டிய அரச ராஜ்ஜியங்களால் மற்ற சமூக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் வளர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டுள்ளன. அரச தமிழ் மன்னர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கிய நிறுவனங்களும் அடையாளங்களும் இன்னும் உண்மை, நீதி, அன்பு மற்றும் அகிம்சையை பேசும் நித்திய விழுமியங்களின் அடையாளங்களாகவே இருக்கின்றன.

மன்னர்கள் மட்டுமன்றி அவர்களின் ராஜகுருக்கள், கவிஞர்கள், அறிஞர்கள், இசைக்கலைஞர்கள் போன்றோரும் உலக அளவில் தமிழ் அறிவின் வற்றாத ஊற்றுக்கண்களாக இருந்தனர். உலக அளவில் போற்றப்படும் திருவள்ளுவரின் திருக்குறள், மேலிருந்து கீழாக அனைத்தையும் உள்ளடக்கிய நித்திய மதிப்புகளின் தொகுப்பாகும்.

இந்தியா போன்ற ஒரு நாகரிகத் தொடர்ச்சியான நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளிலும் பின்பற்றப்படும் பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஒருபோதும் இழக்கப்படவில்லை. அத்தகைய பொக்கிஷமான சொத்துகளில் ஒன்று செங்கோல் ஆகும். இது உலகளாவிய ஏற்றுக்கொள்ளல் மற்றும் உலகின் பல பகுதிகளில் இன்னும் மதிக்கப்படுகிறது.

பண்டைய நாகரிகங்களான எகிப்து, மெசபடோமியா, கிரேக்க-ரோமன் போன்ற பல்வேறு நாடுகளில் மத நம்பிக்கைகள் தவிர, செங்கோலுக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோல், 1949ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரமடைந்த போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக வழங்கப்பட்டது.

இலங்கையில் அதற்கு ‘செம்கோலாயா’ என்று பெயர். இந்திய நாகரிகம் விதிவிலக்கல்ல. ஒருமுறை விஷ்வகுருவாக இருந்த அது மீண்டும் அந்த நிலையை நோக்கி நகர்கிறது. அரசனையும், அரசையும் பிணைத்தது செங்கோல் தான். ஈட்டியோ வாளோ அல்ல என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியது.

திருக்குறளின் செங்கோன்மை என்ற அத்தியாயம், ‘வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி’ (542வது குறள்) என்று கூறுகிறது. இதன் பொருள், ‘மழைக்காக உலகம் வானத்தை நோக்குவது போல், மக்கள் ஆட்சியாளரையும் அவர் செங்கோலையும் பார்க்கிறார்கள்’.

செங்கோலின் ஆழம் தான் தமிழ் நிலத்தின் ஒரு அங்கமாக ஆக்கியது. இது ஒரு மன்னரின் சட்டம் மற்றும் நீதிக்கான ஆதாரமாக மட்டுமல்லாமல், அதிகாரத்தில் உள்ள பல்வேறு அதிகாரிகளிடமிருந்து சாதாரண மனிதனின் எதிர்பார்ப்புக்கான உத்வேகமாகவும் உள்ளது. இது நியாயமான நிர்வாக செயல்முறைகளை நிறுவுகிறது.

உலகளாவிய மதிப்பின் அடையாளமாக, செங்கோல் பழங்காலத்திலிருந்தே ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது. இந்த வார்த்தையின் உள்ளர்த்தம் அதை எப்போதும் சிறப்பு செய்கிறது.

செங்கோல் என்பது செம்மை + கோல் என்பதன் கலவையாகும். இது சட்டத்தின் ஆட்சி மற்றும் ஆளுமையின் ஒரு சின்னமான பிரதிநிதித்துவமாகும். மேலும் அரச கருவூலத்திற்கு ஒரு அலங்கார சேர்க்கை அல்ல. தமிழ் மன்னர்களும் அவர்களின் ராஜ்ஜியங்களும் எப்போதும் நாம் கொண்டாட வேண்டிய பெருமைக்குரியவை.

முடிசூட்டு விழாவின் போது (6 மே 2023) பிரிட்டன் மன்னர் சார்லஸ் செங்கோலைப் பிடித்திருந்ததை நாம் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இப்போது நாடாளுமன்றத்தில் செங்கோலை மோடி நிறுவியதை (28 மே 2023) நமது சொந்த விழா போன்று பார்ப்பதற்கான சரியான அறிகுறியாகும்.

அதிகாரங்கள் மாறினாலும் செங்கோல் மாறாமல் உள்ளது. புதிய மன்னரிடம் ஒப்படைக்கப்படுகிறது; முக்கியத்துவம் வாய்ந்த பிற நிகழ்வுகளிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது. செங்கோலின் இந்த வரலாற்று முக்கியத்துவத்தைத்தான் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் ஒரு நாடகமில்லாமல் சரியான இடத்தில் வைத்து பலரது விருப்பங்களை நிறைவேற்றியுள்ளார்.

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு பிறகு நிச்சயமான உண்மைகளுடன் கூடிய நிகழ்வை பிரதமர் மோடி மீண்டும் அரங்கேற்றியிருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ஒரு வரலாறே. சுருக்கமாக சொன்னால் செங்கோல் ஒரு காவிய நிகழ்வின் மையமாக உள்ளது.

செய்திக்கதிர் குழு–

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe