விஸ்வ சம்வாத் கேந்திரம் வழங்கிய பத்திரிகையாளர் எழுத்தாளருக்கான ‘நாரதர் விருது’

vsk dt award function - 2026

மதுரையில் விஸ்வ சம்வாத் கேந்திரா தக்ஷிண தமிழ்நாடு சார்பில், நாரதர் ஜயந்தி மற்றும் சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரையில் தென்தமிழக விஸ்வ சம்வாத் கேந்திரம் அமைப்பு சார்பில் ஊடகத்துறை மூலம் தேசிய, தெய்வீக சிந்தனையை மக்களுக்கு கொண்டு சென்ற இருவருக்கு நாரதர் விருது வழங்கப்பட்டது.

தென்தமிழக விஸ்வ சம்வாத் கேந்திரம் அமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான நாரதர் விருது வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது. ஊடகத்துறை மூலம் தேசிய, தெய்வீக சிந்தனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்பவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.

விழாவிற்கு மதுரை மாணிக்கம் ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஊடகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் பாபு சஜன் கெவின் தலைமை வகித்தார். கேசவன் இறைவணக்கம் பாடினார். ஆர்.எஸ்.எஸ்., செய்தித் தொடர்பாளர் வக்கீல் முத்துராமலிங்கம் வரவேற்றார். 

மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் வரலொட்டி ரங்கசாமி, நெல்லை தினமலர் நிருபர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோருக்கு சிறந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளருக்கான நாரதர் விருது வழங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., ஊடகப்பிரிவு பொறுப்பாளர் மோகன் விருதை வழங்கினார்.

தியாகபூமி மாத இதழ் ஆசிரியர் கிருஷ்ண முத்துசாமி பேசினார். விருது பெற்ற வரலொட்டி ரங்கசாமி, வெங்கட சுப்பிரமணியன் இருவரும் ஏற்புரை ஆற்றினர். மூத்த பத்திரிகையாளர் செங்கோட்டை ஸ்ரீராம், ஆர்.எஸ்.எஸ்., மாநிலப் பொறுப்பாளர் ராஜமுருகானந்தம், ஆலயப் பாதுகாப்புக்குழு மாநில அமைப்பாளர் கிருஷ்ண ராஜ், வக்கீல் அமைப்பு மாநில அலுவலக செயலாளர் செல்வகுமார், ஆர்.எஸ்.எஸ்., கோட்டச் செயலாளர் சேகர் மற்றும் ஊடகவியலாளர்கள், வக்கீல்கள், எழுத்தாளர்கள், சமூக வலைதள செயற்பாட்டாளர்கள், குறும்பட இயக்குனர்கள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு இயக்கத்தினர் கலந்து கொண்டனர். பாலகுருசாமி நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories