திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம் கோவா கர்நாடகா ஆகிய மூன்று மாவட்டங்கள் மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் குறித்து அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்
கோவாவில் பனாஜி தொகுதியிலும் தமிழகத்தில் சூலூர் அரவக்குறிச்சி திருப்பரங்குன்றம் ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளிலும் கர்நாடகாவில் குண்ட்கோல் தொகுதியிலும் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
ஏப்ரல் 22 ஆம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்
ஏப்ரல் 29 ஆம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள்
ஏப்ரல் 30ஆம் தேதி வேட்புமனுக்கள் இறுதி செய்யப்படுகின்றன
மே இரண்டாம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள்
மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது
மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது
மே 28ஆம் தேதியுடன் தேர்தல் நடைமுறை இங்கு முடிவுக்கு வருகிறது
இந்த அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது