இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு சட்டசபை தொகுதிகளில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது!
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கெனவே மக்களவைத் தேர்தல் முடிந்து உள்ள தொகுதிகளில் 13 ஓட்டுச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது!
இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு சட்டசபை தொகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மே 1 முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த 4 தொகுதிகளிலும் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது
பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடாவை துவங்கியுள்ளதாகக் கூறப் படுகிறது.