திருவேங்கடம் அருகில் மீண்டும் வெடி விபத்து அலுவலா்கள் மீது கடும் எடுக்க வைகோ வலியுறுத்தல்..!

viikoo - 2026

திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் வரகனுார் கிராமத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் ஆலை வெடித்துச் சிதறி 6 தொழிலாளா்கள் இறந்தனர். அதில் பலர் உடல் கருகியும், படுகாயமுற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர்
.
இதனை தொடர்ந்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள அதிர்ச்சியான தகவல் நெஞ்சை பதற வைக்கிறது

மூடி சீல் வைக்கப்பட்டுள்ள அந்த ஆலையின் ஒரு பகுதி கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் இன்று காலை வெடித்து சிதறியதில் ஆலைக்கு வெளியே தனியார் நிலத்தைச் சீரமைக்கும் பணியில் இருந்த மாங்குடி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளா்களான கோபால், கனகராஜ், அர்ஜீன். குருசாமி, காமராசர் ஆகியோர் பாிதாபமாக இறந்து விட்டனா்.

இதில் அர்ஜீன் 17வயது பள்ளி மாணவன் என்பதும், கோடை விடுமுறையில் குடும்பத்தின் வறுமை காரணமாக வேலைக்கு வந்தவர் என்பது மிகவும் வருத்தமான விஷயமாக உள்ளது.

பட்டாசு ஆலையை மூடி சீல் வைப்பதற்கு முன்பு ஆபத்தான பட்டாசுகளோ, இரசாயனக் கலவைகளோ வெடித்ததால் உயிர் சேதம் ஏற்படுத்தும் பொருட்களோ, ஆலை வளாகத்தில் இல்லை என்பதை அரசு நிர்வாகமும சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் உறுதிபடுத்தாது ஏன்? குறைந்தபட்சம் ஆலைக்குள் ஆபத்தான பொருட்கள் உள்ளது. என்பதைக்கூட அறிவிப்பு மூலம் வெளிப்படுத்தாது ஏன்? என்ற கேள்விகள் எழுகின்றன.

அப்பாவி தொழிலாளாகள் ஐந்துபேரின் உயிர் இழப்பிற்கு காரணமான தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் பொறுப்பற்ற போக்கினை கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இதற்கு காரணமான துறை அதிகாரிகள், அலுவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆலையை ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்து எஞ்சி இருக்கின்ற ஆபத்தான பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்

எனவும் இறந்த தொழிலாளிகள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகின்றேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories