தமிழகத்தில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக வரும் 10ஆம் தேதி தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
வரும் 10ஆம் தேதி தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.