வாய்ப்புண் நீங்க…
மோரில் சிறிது உப்பு கலந்து வாயில் ஊற்றி விழுங்காமல் அப்படியே
சிறிது நேரம் வைத்திருந்து துப்பி விடுங்கள்.
சீரணக் கோளாறு இருந்தாலும் வாய்ப்புண் வரும். இதற்கு
கரிசலாங்கண்ணி கீரை மிகவும் உகந்தது. இதனை வேக வைத்தோ.
லேகியமாகவோ சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும்.
விரை வீக்கத்திற்கு…
கழற்சிக் காயை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து நன்கு
தூள் செய்து, ஒரு கோழி முட்டையின் வெண் கருவை மட்டும்
உடைத்து ஊற்றி நன்றாக குழப்பி வீக்கத்தின் மீது தடவி வர
குணமாகும்.
அடிக்கடி பேதி ஆகிறதா?
உடம்பு சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புளி, காரம், காபி.
டீ தவிர்த்தல் நலம். பால் சோறு சாப்பிடலாம். கறிவேப்பிலையை
அரைத்து பசு மோரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
மதிய உணவில் கறிவேப்பிலையை பொடியாகவோ, துவைய
லாகவோ செய்து நெய் சேர்த்து சாப்பிட பேதி நிற்கும். கறிவேப்பிலை.
வாய்ப்புண் வராமல் தடுக்கும். சோகை நோயையும் தடுக்கும்.
ஆண்மைக் குறைவா?
வெங்காய விதை ஒரு கரண்டி எடுத்து அம்மியில் வைத்து ஒரு
கரண்டி தேன் கலந்து அரைத்து அதனுடன் ஒரு முட்டையைக் கலந்து
தினசரி காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 15 நாள்கள் சாப்பிட்டு
வர தாது விருத்தி ஏற்படும்.
மதுவின் விஷம் முறிய…
மது சாப்பிட்டு பழகியவர்களுக்கு உடலில் மதுவின் விஷத்தன்மை
இருந்து கொண்டே இருக்கும். நெல்விக்காய் சாறு. நெல்லிப் பொடி.
நெல்லிக் காய் லேகியம் இப்படி ஏதேனும் ஒன்றை சாப்பிட்டு விட்டு
அந்த விஷத்தன்மை நாளடைவில் மறையும்.