மலைப்பாம்பு ஓன்று வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு புலி செல்லும் வழியில் படுத்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் அடிக்கடி விலங்குகள் செய்யும் சேட்டைகள் மற்றும் ஏதாவது ஒரு விசித்திரமான வீடியோவை பதிவிடுவார். அந்த வீடியோ வைரலாகும். அந்தவகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாம்பிற்கு புலி வழி விடுகிறது’ என்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் மலைப்பாம்பு ஓன்று வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு புலி நடந்து செல்லும் வழியில் தூங்கி கொண்டு கிடக்கிறது. அப்போது வழியில் படுத்துக்கிடந்த பாம்பை கண்ட புலி எப்படி தாண்டி செல்வது என்று அருகில் நின்று யோசித்து பின் அதனை ஏதும் செய்யாமல் சுற்றி செல்கிறது. இந்த வீடியோவை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.
Tiger leaves the way to Python.. pic.twitter.com/87nGHbo0M0
— Susanta Nanda IFS (@susantananda3) July 21, 2020