spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

- Advertisement -
electoral bonds modi

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

தேர்தல் பத்திரங்களும் ஒளிவுமறைவற்ற தன்மையும்

கேள்வி – ஒரு வினா தேர்தல் பத்திரங்கள் தொடர்பானது.  ராகுல் காந்தி எங்கு சென்றாலும் சரி அனைத்து உரைகளிலும் கூறுகிறார், அதே போல மற்ற எதிரணித் தலைவர்களுமே சரி,  இது கோளாறாக இருக்கிறது என்கிறார்கள்.  உங்கள் கட்சிக்காரர்களுமே கூட இதில் தவறு ஏதும் இருப்பின் இதைச் சரி செய்து கொள்ளலாமே என்கிறார்கள்.  தேர்தல் பத்திரங்கள் தவறான முடிவா? 

பிரதமர் மோடியின் பதில் – முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது.   தேசத்தின் தேர்தல்களை கருப்புப் பணத்திலிருந்து விடுதலை அளிக்கும் விவாதம் பல காலமாகவே நடைபெற்று வருகிறது.  தேர்தல்களிலே… செலவு என்னவோ நடக்கத் தான் செய்கிறது.  யாரும் இதை மறுக்கவில்லையே!!  என் கட்சியும் செய்கிறது அனைத்துக் கட்சிகளும் செய்கின்றன வேட்பாளர்களும் செய்கின்றார்கள்.   

இந்தப் பணத்தை, மக்களிடமிருந்து தான் பெற வேண்டியிருக்கிறது.  அனைத்துக் கட்சிகளும் பெறுகின்றன.  நான் என்ன விரும்பினேன் என்றால் முயன்று பார்க்கலாமே.   அதாவது இந்தக் கருப்புப் பணத்திலிருந்து, நம்முடைய தேர்தல்களை எப்படி விடுவிப்பது?   ஒளிவுமறைவற்ற நிலையை ஏற்படுத்துவது.  அடிப்படையான பவித்திரமான ஒரு எண்ணம் என் மனதில் ஒலித்தது. 

வழிகளைத் தேடிக் கொண்டிருந்தோம்.  ஒரு எளிய வழி கிடைத்தது… இதுவே நிறைவான வழி என்று நான் அப்போதுமே கூறவில்லை.  நாடாளுமன்றத்திலே விவாதங்களின் போது பலர் இதைப் பாராட்டினார்கள்.  இன்று முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவோர் பலரும் மெச்சினார்கள்.  நீங்கள் நாடாளுமன்ற விவாதங்களை எடுத்துப் பாருங்கள். 

எங்கள் பணி எப்படி இருந்தது என்றால், நாங்கள் 1000-2000 ரூபாய்களுக்கு முடிவு கட்டினோம்.  தேர்தல்களிலே இவை தாம் பெரியபெரிய எண்ணிக்கையில், கைமாறுகிறது.  ஏன்?  இந்தக் கருப்புப் பணத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.   நாங்கள், உச்சநீதிமன்றத்திலும் கூறினோம், அதாவது 20000 ரூபாய் வரை, அரசியல் கட்சிகள் ரொக்கமாக பணம் பெறலாம். 

நாங்கள் சட்டமியற்றினோம், விதிமுறை அமைத்தோம், 20000த்தை 2500ஆக ஆக்கினோம்.  ஏன்?  ஏனென்றால் இந்த ரொக்கமாக வாங்குவதை நான் விரும்பவில்லை.   அதன் பிறகு தேர்தல் பத்திரம் பற்றிக் கூறினேன்.   அதாவது… எந்தக் கட்சி அதை, ரகசியமாக வைக்க விரும்புகிறதோ, ஆனால் என்ன நடந்தது என்றால், நாங்கள் முன்பெல்லாம் பாஜகவில், காசோலை மூலமாகப் பணம் பெற்று வந்தோம். 

அப்போது வியாபாரிகள் எல்லாம் வந்து எங்களால் காசோலையில் பணம் தரவே முடியாது என்றார்கள்.  ஏன் முடியாது என்று கேட்டோம்.  காசோலையில் அளித்தால் நாங்கல் எழுத வேண்டியிருக்கும்.  நாங்கள் எழுதினால் அரசாங்கம் அதை கவனிக்கும்.   அதாவது இவர்கள் எதிரணிக்கு இத்தனை பணம் தந்திருக்கிறார்கள் என்று.  எங்களுக்குப் பிறகு அவர்கள், நெருக்கடி தருவார்கள்.   நாங்கள் என்னவோ….. பணம் தரத் தயாராக இருக்கிறோம் ஆனால் காசோலை மூலம் அல்ல என்றார்கள்.   எனக்கு நினைவிருக்கிறது அப்போது, 90களில் நடந்த தேர்தலில் எங்களுக்குப் பெரிய சங்கடம் ஏற்பட்டது.  பணம் எங்களிடம் இல்லை.   நாங்களோ விதிமுறை ஏற்படுத்தி காத்திருந்தோம்,  நாங்கள் காசோலை மட்டுமே பெறுவோம் என்று.  அளிப்பவர் அளிக்கத் தயார் ஆனால் காசோலை மூலம் அல்ல தைரியம் இல்லை. 

இந்த விஷயங்கள் அனைத்தையும் நான் அறிவேன்.   எனக்கு தெரியும்.    என்ன செய்யலாம்னு யோசிச்சோம்.  இங்க பாருங்க, தேர்தல் பத்திரம் இல்லைன்னு சொன்னா, பணத்தோட ஆதாரத்தைக் கண்டுபிடிக்க எந்த அமைப்பால முடியும்?       அதாவது எங்கிருந்து பணம் வந்திச்சு எங்க போச்சுன்னு?   இது தான் தேர்தல் பத்திரத்தோட வெற்றிக் கதை.  அதாவது தேர்தல் பத்திரம் இருக்கறதால, பணத்துக்கான ஆதாரம் கிடைக்குது.   

எந்தக் கம்பெனி கொடுத்தது, எப்படிக் கொடுத்தார்கள் எங்கே கொடுத்தார்கள்?   அது சரியா தவறா என்பது விவாதப் பொருளாக ஆகலாம்.  இதைப் பற்றி விவாதிக்கலாம்.  என் கவலையெல்லாம், நான், நான் எப்போதுமே கூறுவதில்லை, தீர்மானத்திலே குறைபாடு உள்ளதென்று.  தீர்மானிக்கிறோம், அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்கிறோம், மேம்படுத்துகிறோம்.   இதிலும் கூட மேம்பாட்டுக்கான பல வாய்ப்புகள் இருக்கின்றது.   ஆனால், நாம் இன்று கருப்புப்பணத்தின் பால் தேசத்தைத் தள்ளியிருக்கிறோம்.   

ஆகையால் தான் கூறுகிறேன் அனைவரும் வருத்தப்படுவார்கள்.  நேர்மையாக நாம் நினைத்தோம் என்றால் அனைவருக்கும் வருத்தம் தான் மிஞ்சும்.   இன்னொரு விஷயம்.  தேர்தல் பத்திரம் தொடர்பாக பேசப்பட்டு வரும் இன்னொரு பொய்யுரை.  தேசத்திலே மொத்தம் 3000 கம்பெனிகள், தேர்தல் பத்திரங்கள் அளித்திருக்கின்றன.   அந்த 3000த்திலே, 26 கம்பெனிகள் எப்படிப்பட்டவை என்றால், இவை மீது நடவடிக்கை உள்ளது.   ஈடி போன்ற அமைப்புகள் என்கிறார்கள் இல்லையா?   3000 கொடையாளிகளில் வெறும் 26.   மேலும் அவற்றிலே, 16 கம்பெனிகள் எப்படிப்பட்டவை?   சோதனை நடந்த போது, அப்போது பத்திரங்களை வாங்கினார்கள்.   இதை இணைத்துப் பார்க்கலாம். 

பத்திரங்களை வாங்கினார்கள் என்றால்,  இதை இணைத்துப் பார்க்கிறார்கள்.  இதன் சிறப்புத்தன்மை என்னவென்றால், இதிலே பத்திரங்களை வாங்கிய 16 கம்பெனிகள்,  அதிலே 37 பைசா அளவு தொகை, பாஜகவிற்கு கொடையாகக் கிடைத்திருக்கிறது.   37.  63 சதவீதம், பாஜகவின் எதிரணிக் கட்சிகளுக்குக் கிடைத்திருக்கிறது. 

வினா –  அதாவது முழுவதுமாக இணைத்துப் பார்த்தால்?

விடை – அதாவது, இந்த 16 கம்பெனிகள் இவற்றின் மேல்,  ஈடி சிபிஐ ஆகியவற்றின் நடவடிக்கைகளும் நடந்தன பத்திரங்களும் வாங்கின.  37 சதவீதம் பாஜகவிற்கும் 63 சதவீதம் எதிர்க்கட்சிகளுக்கும்.  

ஆமாம், ஈடி சோதனை நடத்தும், ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு தொடர்ந்து நன்கொடை அளிக்கும்?   இப்படி பாஜக செய்யுமா?   இதன் அர்த்தம் என்னவென்றால், 63 சதவீதம் தொகை எதிர்க்கட்சிகளுக்குச் சென்றது, ஆனால் குற்றச்சாட்டை எங்கள் மீது வீசுகிறார்கள்.   அவர்களுக்கென்ன தூற்றிவிட்டு ஓடிவிட வேண்டும் அவ்வளவு தானே?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe