பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி திருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்நாளில் அனைவரும் ஆரோக்கியமும், செல்வ வளமும் பெறட்டும் என அவரது டிவிட்டர்பதிவில் குறிப்பிட்டுள்ளார்
நவராத்திரி பண்டிகையின் முதல் நாளான இன்று மாதா சைலபுத்ரியை (மலைமகள்) வணங்குவோம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
மலைமகளின் பேரருளால் நம் பூமி பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளமுடையதாகவும் மாறட்டும் என்று குறிப்பிட்டுள்ள மோடி, ஏழைகள் மற்றும் சமூகத்தில் அடிநிலையில் இருப்பவர்களின் வாழ்வில் நல்ல மாற்றமும் வலிமையும் வரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.