IPL 2024: கொல்கத்தா அணி பெற்ற எளிய வெற்றி

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

40ம் நாள்: ஐபிஎல் 2024 – 29.04.2024 

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி அணியை (153/9, குல்தீப் யாதவ் 35*, ரிஷப் பந்த் 27, அபிஷேக் போரல் 18, அக்சர் படேல் 15, ப்ருத்வி ஷா 13, ஜேக ஃப்ரேசர் மகுர்க் 12, வருண் சக்ரவர்த்தி 3/16, வைபவ் அரோரா 2/29, ஹர்ஷித் ராணா 2/28) கொல்கொத்தா அணி (16.3 ஓவர்களில் 157/3, பில் சால்ட் 68, ஷ்ரேயாஸ் ஐயர், 33*, வெங்கடேஷ் ஐயர் 26*, சுனில் நரேன் 15, ரிங்கு சிங் 11, அக்சர் படேல் 2/25) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களான ப்ருத்வி ஷா (7 பந்துகளில் 13 ரன்) மற்றும் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (7 பந்துகளில் 12 ரன்) இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.

அவர்களுக்குப் பின்னர் ஆடவந்த அபிஷேக் போரல் (15 பந்துகளில் 18 ரன்), ஷாய் ஹோப் (3 பந்துகளில் 6 ரன்), ரிஷப் பந்த் (20 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), அக்சர் படேல் (21 பந்துகளில் 15 ரன், 2 ஃபோர்), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (7 பந்துகளில் 4 ரன்), குமார் குஷகரா (1 ரன்), ரசிக் சலாம் (8 ரன்), லிசாட் வில்லியம்ஸ் (ஆட்டமிழக்காமல் 1 ரன்) ஆகியோர் இன்று சிறப்பாக விளையாடவில்லை.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

குல்தீப் யாதவ் மட்டும் 26 பந்துகளில் 35 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கட் இழப்பிற்கு 153 ரன் எடுத்திருந்தது. 

154 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர்களான பில் சால்ட் (33 பந்துகளில் 68 ரன், 7 ஃபோர், 5 சிக்சர்) மற்றும்  மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரேன் (10 பந்துகளில் 15 ரன், 3 ஃபோர்) இருவரும் அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களம் இறங்கிய ரிங்கு சிங் (11 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர்) இன்று சோபிக்கவில்லை.

அதன் பின்னர் ஆடவந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் கொல்கொத்தா அணிக்கு ஒரு நல்ல் வெற்றியைத் தேடித்தந்தனர். அந்த அணி 16.3 ஓவரிலேயே 3 விக்கட் இழப்பிற்கு 157 ரன் எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

கொல்கொத்தா அணியின் சுழல்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை லக்னோவில்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

29.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 981160.694
கொல்கொத்தா963121.096
சென்னை954100.810
ஹைதராபாத்954100.075
லக்னோ954100.059
டெல்லி115610-0.442
குஜராத்10468-1.113
பஞ்சாப்9366-0.187
மும்பை9366-0.261
பெங்களூரு10376-0.415

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories