IPL 2024: கொல்கத்தா அணி பெற்ற எளிய வெற்றி

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

40ம் நாள்: ஐபிஎல் 2024 – 29.04.2024 

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி அணியை (153/9, குல்தீப் யாதவ் 35*, ரிஷப் பந்த் 27, அபிஷேக் போரல் 18, அக்சர் படேல் 15, ப்ருத்வி ஷா 13, ஜேக ஃப்ரேசர் மகுர்க் 12, வருண் சக்ரவர்த்தி 3/16, வைபவ் அரோரா 2/29, ஹர்ஷித் ராணா 2/28) கொல்கொத்தா அணி (16.3 ஓவர்களில் 157/3, பில் சால்ட் 68, ஷ்ரேயாஸ் ஐயர், 33*, வெங்கடேஷ் ஐயர் 26*, சுனில் நரேன் 15, ரிங்கு சிங் 11, அக்சர் படேல் 2/25) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களான ப்ருத்வி ஷா (7 பந்துகளில் 13 ரன்) மற்றும் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (7 பந்துகளில் 12 ரன்) இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.

அவர்களுக்குப் பின்னர் ஆடவந்த அபிஷேக் போரல் (15 பந்துகளில் 18 ரன்), ஷாய் ஹோப் (3 பந்துகளில் 6 ரன்), ரிஷப் பந்த் (20 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), அக்சர் படேல் (21 பந்துகளில் 15 ரன், 2 ஃபோர்), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (7 பந்துகளில் 4 ரன்), குமார் குஷகரா (1 ரன்), ரசிக் சலாம் (8 ரன்), லிசாட் வில்லியம்ஸ் (ஆட்டமிழக்காமல் 1 ரன்) ஆகியோர் இன்று சிறப்பாக விளையாடவில்லை.

குல்தீப் யாதவ் மட்டும் 26 பந்துகளில் 35 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கட் இழப்பிற்கு 153 ரன் எடுத்திருந்தது. 

154 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர்களான பில் சால்ட் (33 பந்துகளில் 68 ரன், 7 ஃபோர், 5 சிக்சர்) மற்றும்  மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரேன் (10 பந்துகளில் 15 ரன், 3 ஃபோர்) இருவரும் அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களம் இறங்கிய ரிங்கு சிங் (11 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர்) இன்று சோபிக்கவில்லை.

அதன் பின்னர் ஆடவந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் கொல்கொத்தா அணிக்கு ஒரு நல்ல் வெற்றியைத் தேடித்தந்தனர். அந்த அணி 16.3 ஓவரிலேயே 3 விக்கட் இழப்பிற்கு 157 ரன் எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கொல்கொத்தா அணியின் சுழல்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை லக்னோவில்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

29.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 981160.694
கொல்கொத்தா963121.096
சென்னை954100.810
ஹைதராபாத்954100.075
லக்னோ954100.059
டெல்லி115610-0.442
குஜராத்10468-1.113
பஞ்சாப்9366-0.187
மும்பை9366-0.261
பெங்களூரு10376-0.415

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories