December 5, 2025, 7:48 PM
26.7 C
Chennai

தாலிக்கயிறைக் கூட விட்டுவைக்க மாட்டார்கள்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை சாடிய மோடி!

modi in vellore - 2025
#image_title

சகோதர சகோதரிகளே, இப்போதெல்லாம் காங்கிரசை விட்டுவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் ஒரு விஷயத்தை மிகத் தீவிரமாகக் கூறுகிறார்கள்.  

அவர்கள் எல்லாம் கூறுகிறார்கள் – இப்போது காங்கிரஸ் காங்கிரஸாக இல்லை என்கிறார்கள்.   இப்போது காங்கிரஸ் அர்பன் நக்ஸல்வாதிகள் கைகளில் சென்று விட்டது. 

காங்கிரஸ் இப்போது, இடதுசாரிகளின், வலையில் சிக்கி இருக்கிறது.   நண்பர் ஒருவர் அவர்களிடம் கேட்டார், இதை எப்படி நீங்கள் சொல்கிறீர்கள் என்று?   அவர்களுடைய தேர்தல் அறிக்கையைப் பாருங்கள் என்று அவர் கூறினார்.  

இந்த முறை வெளியாகி இருக்கும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பாருங்கள்!! 

 காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது, கவலையளிப்பது ஆபத்தானது.  மேலும் மாவோ சித்தாந்த, எண்ணத்தை பரவலாக்குவது தான் அவர்களுடைய, இந்த முயற்சி.  

அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள்?  ஒரு வேளை காங்கிரஸின் ஆட்சி அமைந்தால், அனைவரின் சொத்து விவரங்கள் ஆய்வு செய்யப்படும்.   நம்முடைய சகோதரிகளிடம் எத்தனை தங்கம் இருக்கிறது,  இது ஆய்வு செய்யப்படும்.   அது கணக்கு செய்யப்படும். 

நம்முடைய பழங்குடி குடும்பங்களிடம் வெள்ளி இருக்கும்.   எத்தனை வெள்ளி இருக்கிறது என்பது கணக்கெடுக்கப்படும்.  

அரசு அலுவலர்களிடம் எத்தனை இடம் இருக்கிறது பணம் என்ன எங்கே இருக்கிறது வேலை எங்கே என்ன, இது ஆய்வு செய்யப்படும்.   இது மட்டுமா மேலும் என்ன கூறியிருக்கிறார்கள் தெரியுமா?  

நம் சகோதரிகளிடம் இருக்கும் தங்கம் இருக்கிறதே!!   மேலும் இருக்கும் சொத்துக்கள், இவை அனைத்தையும், சமமான வகையிலே பிரித்துக் கொடுத்து விடுவார்களாம்.   என்ன இது உங்களுக்கு சம்மதமா?   

உங்கள் சொத்துக்களைக் கவர அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா?   உங்களுடைய சொத்துக்களை, கடினமாக நீங்கள் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை, அரசாங்கம் கவர்ந்து கொள்ள அதிகாரம் இருக்கிறதா?  

அந்தச் சொத்துக்களை, என் தாய்மார்கள் சகோதரிகளின் வாழ்க்கையிலே, தங்கம், அது வெறும், பகட்டுப் பொருள் மட்டும் அல்ல.   அது சுயகௌரவத்தோடு தொடர்புடையது.   அவர்கள் அணியும் தாலி, அது பணம் கொண்டு எடை போடும் பொருளல்ல.  அவர்களுடைய வாழ்க்கையின் கனவுகளோடு தொடர்புடையது.  

அதைப் பிடுங்குவதைப் பற்றியா உங்கள் அறிக்கையிலே எழுதியிருக்கிறீர்கள்?  

தங்கத்தை எடுத்துக் கொள்வோம், அனைவருக்கும் பங்களித்துக் கொடுப்போம்.  

முன்பு அவர்கள் ஆட்சி நடந்த போது என்ன கூறினார்கள்?   இந்த தேசத்தின் சொத்தின் மீது முதல் அதிகாரம், முஸ்லீம்களுடையது.  இதன் பொருள் என்ன?  இந்தச் சொத்துக்களைச் சேகரித்து யாரிடம் கொண்டு சேர்ப்பார்கள்?   யாருக்கு அதிகக் குழந்தைகள் இருக்கிறார்களோ அவர்களுக்கு அளிப்பார்கள்.   ஊடுறுவல்காரர்களுக்குக் கொடுப்பார்கள்.   

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சேமித்து வைத்த பணம், ஊடுறுவல்காரர்களுக்கா அளிக்கப்பட வேண்டும்?   உங்களுக்கு இதில் சம்மதமா?  

இதையே காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.   தாய்மார்கள் சகோதரிகளின் தங்கத்தைக் கணக்குப் பார்க்க நினைப்பவர்கள், அதைப் பட்டியலிட்டுத் தகவல் சேகரிப்பவர்கள், அதன் பிறகு, அந்தச் சொத்துக்களைப் பிரித்துக் கொடுப்பார்கள்.  

யாருக்குக் கொடுப்பார்கள்?   யாரைப் பற்றி மன்மோஹன் சிங் அவர்களின் அரசு கூறியது?  சொத்துக்களின் மீது முதல் உரிமை முஸ்லீம்களுக்கு உரியது.  

சகோதர சகோதரிகளே, இந்த அர்பன் நக்ஸல் கருத்தியல், என்னுடைய தாய்மார்களே சகோதரிகளே, இது உங்களுடைய, தாலிக் கயிற்றைக் கூட விட்டு வைக்காது.  இந்த அளவுக்குக் கொண்டு போகும் என்பதைக் கூறவே வந்திருக்கிறேன். 

ராஜஸ்தான் பன்ஸ்வாராவில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியவை…
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories