
தமிழில்: முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
வணக்கம் சௌராஷ்டிரா! வணக்கம் தமிழ்நாடு!
குஜராத் முதல்வர் ஸ்ரீ பூபேந்திர பாய் படேல், நாகாலாந்து ஆளுநர் ஸ்ரீ எல்.ஜி. கணேசன் அவர்களே, ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது நண்பர், சகோதரர் புருஷோத்தம் ருபாலா அவர்களே, எல் முருகன் அவர்களே, மீனாட்சி லேகி அவர்களே, இந்த நிகழ்வில் தொடர்புடைய பிற பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே சௌராஷ்டிர தமிழ் சங்கமம், நிகழ்ச்சியில், பாகு பெற வந்திருக்கும், தமிழ் சொந்தங்கள் அணைவரையும், வருக வருக என் வரவேற்கிறேன். உங்கள் அனைவரையும், குஜராத் மண்ணில், இன்று சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தோழர்களே,
விருந்தோம்பலின் இன்பம் மிகவும் தனித்துவமானது என்பது உண்மைதான். ஆனால், ஒருவர் தனது சொந்த வருடங்கள் கழித்து வீடு திரும்பினால், அந்த மகிழ்ச்சி, அந்த உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியின் விஷயம் வேறு. இன்று அதே மனதுடன், சௌராஷ்டிராவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் தங்கள் சகோதர சகோதரிகளை வரவேற்கத் தங்கள் இமைகளை விரித்துள்ளனர். இன்று, அதே பெருமைமிக்க இதயத்துடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது நெருங்கிய மற்றும் அன்பானவர்களிடையே நானும் காணொளி மூலமாகப் பங்கேற்கிறேன்.
2010இல் நான் முதலமைச்சராக இருந்த போது மதுரையில் இவ்வளவு பிரம்மாண்டமான சௌராஷ்டிர சங்கத்தை ஏற்பாடு செய்திருந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. சௌராஷ்டிராவில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தனர். இன்றும், சௌராஷ்டிர தேசத்தில் பாசமும் சொந்தமும் நிறைந்த அதே அலைகள் காணப்படுகின்றன. நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டிலிருந்து உங்கள் முன்னோர்களின் பூமிக்கு, உங்கள் வீடுகளுக்கு இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்திருக்கிறீர்கள். உங்கள் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைப் பார்க்கும்போது, நீங்கள் இங்கிருந்து நிறைய நினைவுகளையும் உணர்ச்சிகரமான அனுபவங்களையும் திரும்பப் பெறுவீர்கள் என்று என்னால் சொல்ல முடியும்.
நீங்கள் சௌராஷ்டிரா சுற்றுலாவையும் மிகவும் ரசித்திருக்கிறீர்கள். சௌராஷ்டிரா முதல் தமிழகம் வரை நாட்டை இணைக்கும் சர்தார் படேலின் ஒற்றுமை சிலையையும் பார்த்திருப்பீர்கள். அதாவது, கடந்த காலத்தின் விலைமதிப்பற்ற நினைவுகள், நிகழ்காலத்தின் தொடர்பு மற்றும் அனுபவம், எதிர்காலத்திற்கான தீர்மானங்கள் மற்றும் உத்வேகங்கள், இவை அனைத்தையும் ஒன்றாக ‘சௌராஷ்டிரா-தமிழ் சங்கமத்தில்’ காண்கிறோம். இந்த அற்புதமான நிகழ்வுக்காக சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன், உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாக் காலத்தில், சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் போன்ற கலாச்சார நிகழ்வுகளின் புதிய பாரம்பரியத்தை நாம் இன்று காண்கிறோம். காசி-தமிழ் சங்கமம் சில மாதங்களுக்கு முன்பு பனாரஸில் ஏற்பாடு செய்யப்பட்டது, இது நாடு முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற பல தன்னெழுச்சியான முயற்சிகள் தொடங்கியுள்ளன. மேலும், இன்று மீண்டும் சௌராஷ்டிரா நிலத்தில் இந்தியாவின் இரண்டு பழமையான நீரோடைகளின் சங்கமத்தை நாம் காண்கிறோம்.
இந்த ‘சௌராஷ்டிர தமிழ் சங்கமம்’ நிகழ்வு குஜராத் மற்றும் தமிழ்நாட்டின் சங்கமம் மட்டுமல்ல. இது மீனாட்சி தேவி மற்றும் பார்வதி தேவியின் வடிவில் ‘ஒரு சக்தி’ வழிபாட்டின் கொண்டாட்டமாகும். இது சோம்நாத் மற்றும் ராம்நாத் வடிவில் உள்ள ‘ஒரே சிவன்’ என்ற பாவனையின் கொண்டாட்டமாகும். இந்த சங்கமம் நாகேஸ்வரர் மற்றும் சுந்தரேஸ்வரர் பூமிகளின் சங்கமமாகும். இது ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ ரங்கநாதரின் சங்கமமாகும். நர்மதையும் வைகையும் சங்கமிக்கும் இடம் இது. தண்டியாவும் கோலாட்டமும் இணையும் இடம் இது! துவாரகை, மதுரை போன்ற புனித நகரங்களின் மரபுகளின் சங்கமம் இது! மேலும், இது சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் சங்கமம் – சர்தார் படேல் மற்றும் சுப்பிரமணிய பாரதியின் தேசத்தின் முதல் உறுதிப்பாடு! இந்த தீர்மானங்களுடன் நாம் முன்னேற வேண்டும். இந்த கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துக்கொண்டு தேசத்தை கட்டியெழுப்ப நாம் முன்னேற வேண்டும்.
நண்பர்களே,
இந்தியா என்பது பன்முகத்தன்மையை ஒரு சிறப்பு எனக் கொண்டு வாழும் நாடு. நாம் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் மக்கள். வெவ்வேறு மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள், பல்வேறு கலைகள் மற்றும் வகைகளை நாங்கள் கொண்டாடுகிறோம். நமது நம்பிக்கை முதல் ஆன்மீகம் வரை எல்லா இடங்களிலும் பன்முகத்தன்மை உள்ளது. நாம் சிவனை வணங்குகிறோம், ஆனால் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் வழிபடும் முறை அதன் சொந்த மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. ஏகோ அஹம் பஹு ஸ்யாம்’ என்று பல்வேறு வடிவங்களில் பிரம்மத்தை ஆராய்ந்து வணங்குகிறோம். ‘கங்கே சா யமுனே சைவ, கோதாவரி சரஸ்வதி’ போன்ற மந்திரங்களில் நாட்டின் பல்வேறு நதிகளை வணங்குகிறோம்.
இந்தப் பன்முகத்தன்மை நம்மைப் பிரிக்காது, ஆனால் நமது பிணைப்பை, நமது உறவை பலப்படுத்துகிறது. ஏனென்றால், வெவ்வேறு நீரோடைகள் ஒன்று சேரும்போது, ஒரு சங்கமம் உருவாகிறது என்பது நமக்குத் தெரியும். எனவே, கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் நதிகளின் சங்கமம் முதல் கருத்துகள் சங்கமம் வரை பல நூற்றாண்டுகளாக இந்த மரபுகளை நாம் வளர்த்து வருகிறோம்.
இதுவே சங்கத்தின் சக்தியை சௌராஷ்ட்ர தமிழ் சங்கம் இன்று புதிய வடிவில் முன்னெடுத்து வருகிறது. இன்று, நாட்டின் ஒருமைப்பாடு, இத்தகைய மாபெரும் விழாக்களாக உருவெடுக்கும் போது, சர்தார் சாஹிப் அதாவது சர்தார் படேல் அவர்கள் நம்மை ஆசீர்வதித்திருக்க வேண்டும். ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற கனவைக் கண்டு, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த, நாட்டின் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள் இதனால் நனவாகும்.
நண்பர்களே,
இன்று, நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாடு தனது ‘பாரம்பரியத்தின்’ ‘பஞ்ச பிராணனை’ அழைத்துள்ளது. அதை அறியும் போது நமது பாரம்பரியத்தின் பெருமை மேலும் அதிகரிக்கும், அடிமை மனப்பான்மையிலிருந்து விடுப