![எனக்கு எதிர்பார்ப்பில்லை; ஏமாற்றமுமில்லை: 'தியாகி’ தினகரன்! 1 dinakaran 1](https://www.dhinasari.com/wp-content/uploads/2017/04/dinakaran-1.jpg)
எனக்கு எதிர்பார்ப்பு இல்லாததால் ஏமாற்றம் இல்லை என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், நடப்பு நிகழ்வுகள் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர்,
அமைச்சர்களுக்கு ஏதோ பயம் ஏற்பட்டுள்ளது.
நான் ஒதுங்குவதால் சிலருக்கு நன்மை என்றால் அதை செய்ய நான் தயங்க மாட்டேன்.
எக்காரணத்தை கொண்டும் இயக்கம் பிளவு படக்கூடாது
என் பலத்தை காட்ட நான் கூட்டம் நடத்தவில்லை. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தினேன்
அமைச்சர்களின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் ? தெரியவில்லை!
பொதுச் செயலாளர் கொடுத்த பதவியில் இருந்து நான் எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும்?
துணை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து பொதுச் செயலாளரிடம் பேசி முடிவு எடுக்கப்படும்
தொண்டர்களுக்கு விரோதமாக நான் நடக்கமாட்டேன்.
எனக்கு ஆதரவு என தனியாக எம்எல்ஏக்கள் இல்லை.
கட்சியை களங்கப்படுத்தி விடக்கூடாது
எனக்கு எதிர்பார்ப்பு இல்லாததால், ஏமாற்றம் கிடையாது.
சலசலப்பால் கட்சி, ஆட்சிக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என உறுதியாக உள்ளேன்.
கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்குமாறு என்னிடம் செங்கோட்டையன் கூறியிருந்தால் நானே ஒதுங்குவதாக கூறியிருப்பேன்
சசிகலா கூறுவதை ஏற்று நான் முடிவு எடுப்பேன்
ஓ.பி.எஸ் அணியுடன் இணைவதால் கட்சிக்கு பலம் என்றால் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கை நல்லது தான்
துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக சொன்னால் விலகுவேன்.
அ.தி.மு.க.வின் இரு பிரிவினரும் இணைந்து செயல்படுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை
அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எனது ஆதரவாளர்களை கேட்டுக் கொள்கிறேன்
கட்சியிலிருந்து நேற்றே நான் ஒதுங்கிவிட்டேன்.
கட்சி நலன் கருதி முதலமைச்சர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
என் பலத்தை காண்பிக்க, சண்டைபோட வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை.
கட்சிக்கு இடையூறு வருமாறு நடந்துகொள்ள மாட்டேன்:
பிரச்னைக்கான காரணம் பற்றி கணிக்க நான் குருமூர்த்தி இல்லை…
சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் என்னை நீக்க பார்க்கிறார்கள்…
– இவ்வாறு அவர் கூறினார்.