December 6, 2025, 8:55 AM
23.8 C
Chennai

ஆர்எஸ்எஸ்., சங்க முகாம்களின் அமைப்பில் புதிய மாற்றங்கள்!

abjps nagpur 2024 - 2025

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சங்க முகாம்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி முகாம் நாட்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆர்.எஸ்.எஸ்., சங்க முகாம்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிராதமிக் எனப்படும் ஆரம்ப நிலை முகாம் 7 நாட்களும், முதலாம் ஆண்டு முகாம் 20 நாட்களும், இரண்டாம் ஆண்டு 20 நாட்களும், மூன்றாம் ஆண்டு 25 நாட்களும் இருந்தது.

சங்க முகாம்களின் அமைப்பில் புதிய மாற்றங்கள்:

இப்போது புதிய கட்டமைப்பில், முதன் முதலாக 3 நாட்கள் அறிமுக ஆயத்த வகுப்பு, 7 நாட்கள் பிராதமிக் முகாம் மற்றும் 15 நாட்கள் முதலாம் ஆண்டு முகாம், கார்யகர்த்தர் விகாஸ் வர்க்க -1 20 நாட்கள் மற்றும் கார்யகர்த்தர் விகாஸ் வர்க்க -2 25 நாட்கள் இருக்கும். இந்த வகுப்புகளில் சிறப்பு நடைமுறை பயிற்சியும் இருக்கும்.

2017 முதல் 2023 வரை ஒவ்வொரு ஆண்டும் RSS.org (JOIN RSS) மூலம் புதிதாக சங்கத்தில் இணைவோர் இந்த இணையதளத்தில் RSS இல் சேர வருடம் தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர். ஜனவரி மற்றும் பிப்ரவரி 2024 இல், ராம் லல்லாவின் பிரதிஷ்டைக்குப் பிறகு இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா எனப்படும், தேசிய பொதுக்குழுவின் மூன்று நாள் கூட்டம், மஹாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹொஸபல்லே உட்பட, 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,500 பேர் பங்கேற்றுள்ளனர். 1925ல் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு நிறைவு விழா காண்கிறது. மேலும், தற்போது ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகரான நரேந்திர மோடி பிரதமராக உள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறார். இந்த நேரத்தில், இந்தப் பொதுக்குழு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில் கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்.,ஸின் செயல்பாடுகள், சாதனைகள், சந்தித்த சவால்கள் குறித்து பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொஸபல்லே அறிக்கை அளித்தார்.

அப்போது அவர் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். ஆர்.எஸ்.எஸ்.,ஸில் பயிற்சி முகாம்கள் என்பது முக்கியமானது. ஏழு நாட்கள் ஆரம்ப நிலை, 20 நாட்கள் முதலாம் ஆண்டு, 20 நாட்கள் இரண்டாம் ஆண்டு, 30 நாட்கள் மூன்றாம் ஆண்டு என, நான்கு கட்டங்களாக பயிற்சி முகாம்கள் நடக்கும். அதில், மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்தில் மட்டுமே நடக்கும். ஆர்.எஸ்.எஸ்.,ஸில் இருப்பவர்களுக்கு இந்த நான்கு கட்ட பயிற்சி முகாம்களையும் முடிப்பதே லட்சியமாக இருக்கும்.

தற்போது, பயிற்சி முகாம்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக மூன்று நாட்கள் அறிமுக பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். அடுத்த ஏழு நாட்கள் ஆரம்ப நிலை பயிற்சி முகாம் நடத்தப்படும். முதலாம் ஆண்டு பயிற்சி முகாம் 20 நாட்களுக்கு பதிலாக, 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டாம், மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம்களுக்குப் பதிலாக பொறுப்பாளர்கள் மேம்பாட்டு முகாம்கள் 20 நாட்கள், 25 நாட்கள் என, இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பேசிய தத்தாத்ரேய ஹொஸபல்லே, ஆர் எஸ் எஸ் என்பது மக்களுக்கான அமைப்பு, அது தனியான அமைப்பல்ல இன்று குறிப்பிட்டு அமைப்பின் நூற்றாண்டு விழாவை மக்களுக்கான விழாவாக கடைபிடிக்க ஏற்பாடுகள் நடப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories