இயக்குனர் எஸ் பி ஜனநாதன் உடல்நலக் குறைபாடு காரணமாக சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்
இவருடைய மறைவு திரையுலகில பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகத்திலிருந்து இன்னும் யாரும் மீண்டு வராத நிலையில் எஸ்பி ஜனநாதன் வீட்டில் இன்னொரு மரணம் நிகழ்ந்துள்ளது.
அதாவது அவருடைய தங்கையான லட்சுமி நேற்றிரவு காலமாகியுள்ளார். எஸ்பி ஜனநாதன் மறைவின்போது அவரது அருகில் அமர்ந்து இருந்த லட்சுமி மயக்க நிலையை அடைந்தார். இந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.