அல்-குவைதாவுடன் தொடர்பு: பெங்களூர் மதரஸா பள்ளி ஆசிரியர் கைது

புதுடில்லி:

அல் – குவைதா பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த, பெங்களூரைச் சேர்ந்த மதரசா பள்ளி ஆசிரியரை, தில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

அல் – குவைதா பயங்கரவாத அமைப்பை இந்தியாவில் துவங்கியவர்களில் ஒருவராகக் கருதப்படும், முகமது ஆசிப்(41) என்பவர், சில மாதங்களுக்கு முன் தில்லியில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், ஒடிசா, உ.பி., மாநிலங்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். அனைவரும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, அல் – குவைதா பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த, பெங்களூரில் உள்ள மதரசா பள்ளியின் ஆசிரியரான மௌலானா அன்சார் ஷா என்பவரை, இரு தினங்களுக்கு முன், தில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரில் இருந்து தில்லிக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வரும், 20ம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அன்சார் ஷா கைது பற்றி தில்லி போலீசார் கூறியபோது, பெங்களூரில் நடந்த மத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அன்சார் ஷாவை, ஆசிப் சந்தித்துள்ளார். அல் – குவைதா பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தரும்படி கேட்டுள்ளார். இதன்பின், ஆசிப் மற்றும் இதர அல் – குவைதா ஆதரவாளர்களுடன், அன்சார் ஷா நட்பை வளர்த்துள்ளார்; இவர்களுக்கு இடையே பண பரிமாற்றமும் நடந்துள்ளது. வலுவான ஆதாரங்கள் கிடைத்ததால், அன்சார் ஷாவை கைது செய்துள்ளோம் என்று கூறினர்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories