spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மதத்தின் பெயரால் இடஒதுக்கீட்டை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை, ஆனால் பாவம் புரிந்த காங்கிரஸ்!

மதத்தின் பெயரால் இடஒதுக்கீட்டை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை, ஆனால் பாவம் புரிந்த காங்கிரஸ்!

- Advertisement -
pmmodi speech in meeting

நண்பர்களே, கர்நாடகத்திலே, காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.   அவர்கள் செய்திருக்கின்ற பாவச்செயல் என்ன?   உங்களுக்கு அதிர்ச்சியே ஏற்படும்.  

இப்போது நீங்களே சொல்லுங்கள்.  உங்கள் கிராமத்தில் ஒரு நாள் ஒருவர் வந்து உங்களிடம் சொல்கிறார், இப்போது இந்த கிராமத்திலே, அனைவரும் இனி இந்த மாதிரி இல்லை வேறாகி விட்டார்கள். 

இது உங்களுக்குச் சம்மதமா?   காங்கிரஸ் அரசாங்கம், கர்நாடகத்திலே, எத்தனை முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்களோ, உயர்மட்டமாக இருக்கலாம், செல்வர்களாக இருக்கலாம், வியாபாரிகளாக இருக்கலாம் தொழிலதிபராக இருக்கலாம் நீதிபதியாக இருக்கலாம்.   யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.   நீங்கள் முஸ்லிமாக இருந்தால் மட்டும் போதும்.  

அவர்கள் முஸ்லிமாக இருந்தால், இவர்கள், இரவோடு இரவாக, ஒரு காகிதத்தில் எழுதிக் கையொப்பமிட்டு, அவர்கள் அனைவரையும், ஓபிசி என்று அறிவித்து விட்டார்கள்.   இவர்களை ஓபிசி என்று அறிவித்த பிறகு பெரிய புயல் வெடித்துக் கிளம்பியது.  

அதாவது, அங்கே காங்கிரஸானது, கல்வி, மற்றும் அரசு வேலைகளில், முதலில் யாருக்கு ஓபிசி இடஒதுக்கீட்டின்படி கிடைத்து வந்ததோ, அந்த ஓபிசி சமூகத்தில் இத்தனை பேரையும் நுழைத்ததால், ஓபிசி சமூகத்துக்குக் கிடைத்துவந்த இடஒதுக்கீட்டை, அவர்களிடமிருந்து பறித்து விட்டார்கள்.   திருட்டுத்தனமாகப் பறித்து விட்டார்கள்.  

மேலும், எந்த முஸ்லீம்களை புதிய ஓபிசியாக ஆக்கினார்களோ,  சட்டவிரோதமாக ஏற்படுத்தினார்களோ, அரசியல் சட்டத்திற்குப் புறப்பாக ஏற்படுத்தினார்களோ, பாபாசாகேப் ஆம்பேட்கரின் உணர்வுகளுக்கு விரோதமாக ஏற்படுத்தினார்களோ, அந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு, ஓபிசிக்குக் கிடைத்து வந்ததை, அதைக் களவாடிக் கொடுத்து விட்டார்கள்.  

உங்களனைவருக்கும் நன்கு தெரியும், தேசத்தின் அரசியல் சட்டம் உருவான வேளையில், மாதக்கணக்கில் ஆழமான கருத்தாய்வுகள் செய்யப்பட்டன.   விவாதங்கள் நடந்தன.  தேசத்தின் மதிப்புமிக்க சான்றோர்கள் இதன் மீது விவாதங்கள் செய்தார்கள்.  

பாபா சாகேப் ஆம்பேட்கர் அவர்கள், இந்த விவாதங்களின் அடிப்படையில் அரசியல் சட்டத்தை அமைத்துக் கொடுத்தார்.   அனைவரும் நன்கு ஆய்ந்து புரிந்து ஒரு முடிவை மேற்கொண்டார்கள்.   நம் தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்காக, தேசத்தின் அரசியல்சட்டம், எந்த ஒரு காரணத்திற்காகவும்,  மதத்தின் அடிப்படையிலே, இடஒதுக்கீட்டை அளிக்காது என்றார்கள்.  

பாபா சாகேப் ஆம்பேட்கர் கூறினார், மதத்தின் பெயரால் இடஒதுக்கீட்டை கொடுக்க முடியாது என்றார்.  ஆகையினால் தான் காங்கிரஸார், ஏமாற்று வேலையில் இறங்கினார்கள்.  

பின்வாசல் வழியாகக் கொடுத்தார்கள்.   பாபாசாகேப் ஆம்பேட்கருடைய முதுகினிலே, கத்தியால் குத்தி விட்டார்கள்.   ஆனால் வாக்குவங்கி,  மற்றும் திருப்திப்படுத்தலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ், கர்நாடகத்தின் இதே மாதிரியை, நாடு முழுவதிலும் அமல்படுத்த விரும்புகிறது.  

  • பிரதமர் மோடியின் உரைகள்
    தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe