December 5, 2025, 7:01 PM
26.7 C
Chennai

மதத்தின் பெயரால் இடஒதுக்கீட்டை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை, ஆனால் பாவம் புரிந்த காங்கிரஸ்!

pmmodi speech in meeting - 2025
#image_title

நண்பர்களே, கர்நாடகத்திலே, காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.   அவர்கள் செய்திருக்கின்ற பாவச்செயல் என்ன?   உங்களுக்கு அதிர்ச்சியே ஏற்படும்.  

இப்போது நீங்களே சொல்லுங்கள்.  உங்கள் கிராமத்தில் ஒரு நாள் ஒருவர் வந்து உங்களிடம் சொல்கிறார், இப்போது இந்த கிராமத்திலே, அனைவரும் இனி இந்த மாதிரி இல்லை வேறாகி விட்டார்கள். 

இது உங்களுக்குச் சம்மதமா?   காங்கிரஸ் அரசாங்கம், கர்நாடகத்திலே, எத்தனை முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்களோ, உயர்மட்டமாக இருக்கலாம், செல்வர்களாக இருக்கலாம், வியாபாரிகளாக இருக்கலாம் தொழிலதிபராக இருக்கலாம் நீதிபதியாக இருக்கலாம்.   யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.   நீங்கள் முஸ்லிமாக இருந்தால் மட்டும் போதும்.  

அவர்கள் முஸ்லிமாக இருந்தால், இவர்கள், இரவோடு இரவாக, ஒரு காகிதத்தில் எழுதிக் கையொப்பமிட்டு, அவர்கள் அனைவரையும், ஓபிசி என்று அறிவித்து விட்டார்கள்.   இவர்களை ஓபிசி என்று அறிவித்த பிறகு பெரிய புயல் வெடித்துக் கிளம்பியது.  

அதாவது, அங்கே காங்கிரஸானது, கல்வி, மற்றும் அரசு வேலைகளில், முதலில் யாருக்கு ஓபிசி இடஒதுக்கீட்டின்படி கிடைத்து வந்ததோ, அந்த ஓபிசி சமூகத்தில் இத்தனை பேரையும் நுழைத்ததால், ஓபிசி சமூகத்துக்குக் கிடைத்துவந்த இடஒதுக்கீட்டை, அவர்களிடமிருந்து பறித்து விட்டார்கள்.   திருட்டுத்தனமாகப் பறித்து விட்டார்கள்.  

மேலும், எந்த முஸ்லீம்களை புதிய ஓபிசியாக ஆக்கினார்களோ,  சட்டவிரோதமாக ஏற்படுத்தினார்களோ, அரசியல் சட்டத்திற்குப் புறப்பாக ஏற்படுத்தினார்களோ, பாபாசாகேப் ஆம்பேட்கரின் உணர்வுகளுக்கு விரோதமாக ஏற்படுத்தினார்களோ, அந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு, ஓபிசிக்குக் கிடைத்து வந்ததை, அதைக் களவாடிக் கொடுத்து விட்டார்கள்.  

உங்களனைவருக்கும் நன்கு தெரியும், தேசத்தின் அரசியல் சட்டம் உருவான வேளையில், மாதக்கணக்கில் ஆழமான கருத்தாய்வுகள் செய்யப்பட்டன.   விவாதங்கள் நடந்தன.  தேசத்தின் மதிப்புமிக்க சான்றோர்கள் இதன் மீது விவாதங்கள் செய்தார்கள்.  

பாபா சாகேப் ஆம்பேட்கர் அவர்கள், இந்த விவாதங்களின் அடிப்படையில் அரசியல் சட்டத்தை அமைத்துக் கொடுத்தார்.   அனைவரும் நன்கு ஆய்ந்து புரிந்து ஒரு முடிவை மேற்கொண்டார்கள்.   நம் தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்காக, தேசத்தின் அரசியல்சட்டம், எந்த ஒரு காரணத்திற்காகவும்,  மதத்தின் அடிப்படையிலே, இடஒதுக்கீட்டை அளிக்காது என்றார்கள்.  

பாபா சாகேப் ஆம்பேட்கர் கூறினார், மதத்தின் பெயரால் இடஒதுக்கீட்டை கொடுக்க முடியாது என்றார்.  ஆகையினால் தான் காங்கிரஸார், ஏமாற்று வேலையில் இறங்கினார்கள்.  

பின்வாசல் வழியாகக் கொடுத்தார்கள்.   பாபாசாகேப் ஆம்பேட்கருடைய முதுகினிலே, கத்தியால் குத்தி விட்டார்கள்.   ஆனால் வாக்குவங்கி,  மற்றும் திருப்திப்படுத்தலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ், கர்நாடகத்தின் இதே மாதிரியை, நாடு முழுவதிலும் அமல்படுத்த விரும்புகிறது.  

  • பிரதமர் மோடியின் உரைகள்
    தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories